

பின் சட்டென ஞாபகம் வந்தவளாக, "ம்ம்... ஆங்... உங்க
பேரு... இத்தனை நாளா உங்க பேர்கூட தெரியாம... நான் ஒரு லூசு...
அன்னைக்கு ஆட்டோவுல ஏறினதுக்கப்புறம்தான் ... அடடா பேரைக்கூட கேக்காம
விட்டுட்டோமேன்னு தோணுச்சு..
சூர்யாவுக்கும் அது இப்போதுதான்
நினைவுக்கு வந்தது. பர்ஸைத் திறந்து விசிட்டிங் கார்டை நீட்டியபடி...
"பரவாயில்லை. ஐ'ம் சூர்யா... ஸ்டெம்ஸெல்ஸ் மார்க்கெட்டிங்ல
இருக்கேன். அன்னைக்குக்கூட அது விஷயமாதான் கல்கத்தா
போய்க்கிட்டிருந்தேன். அங்கு இங்கு சுற்றி பேச்சு ஒரு ஆபத்தில்
மையமிடுவதை உணர்ந்த சூர்யா சட்டென எழுந்தான்.
அவள் முகம்
வாடியது. அது அவனுக்குப் பிடித்திருந்தது. புறப்பட்டவன் வாசலுக்கு
வந்து திரும்பிப் பார்த்தான்.
அவள் புரண்டு
படுத்துவிட்டிருந்தாள். மனசு என்னவோபோலிருந்தது. இது அவள் சுபாவம்...
பழகவேண்டும்... மனசை இலேசாக்கிக்கொண்டான்.
வெளியே அவன்
வந்தபோது வாசலில் நாற்காலியில் அமர்ந்தபடி எதையோ பேசிக்கொண்டிருந்த
கிரிஜாவும் அருணாச்சலமும் பட்டென எழுந்துகொண்டனர். முகத்தில் ஆர்வம்;
கண்களில் ஆவல்.
"ஒண்ணுமில்ல எல்லாம் க்ளியர்... இப்பவே கூட
அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்... இப்ப நான் அவங்க கூட அதிகமா பேச
வேணாம்ன்னுதான் பாதியில கிளம்பறேன்."
அருணாச்சலம்
நெகிழ்ச்சியுடன் சூர்யாவின் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
"சார் கவலைப்படாதீங்க... தேன்மொழியோட வாழ்க்கையில இனி
மகிழ்ச்சியைத்தவிர வேற வார்த்தையே கிடையாது.. கவலையை விடுங்க."
அடுத்த நாள் தேன்மொழியின் உற்சாகத்தை பார்த்து டாக்டர்களே அவளை
வீட்டுக்கு அனுப்பி விட முடிவுசெய்தனர். அருணாச்சலம் இதனைத் தன்
மகளிடம் தெரிவித்தும் சூர்யாவின் வருகைக்காகக் காத்திருந்த
தேன்மொழிக்கு முதலில் வருத்தம்தான் தோன்றியது. சட்டென அவன் ஃபோன்
நம்பருக்குத் தன் முதல் குறுஞ்செய்தியை அனுப்பினாள். அதனை எப்படி
அனுப்பினால ரசிப்பான் என நினைத்தவள், ஆங்கிலத்தில் அவசரமாகத்
தட்டினாள்.
"இன்று நீங்கள் ஒரு சிறந்த முட்டாளாக
விரும்பினால், உடனே என்னைப் பார்க்க விஜயா ஹெல்த் சென்டர் அறை எண்
310க்கு வரலாம்...பை... தேன்மொழி


மலரிடம் நேசம்
மந்தார
குஸுமப்ரியா - மந்தார மலரானது தேவலோகத்து மலர் என்று
கணக்கு. தேவலோகத்தில் மட்டுமே இருக்கக்கூடிய சில
மரங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று மந்தார மரம். அதன் மலர்
அம்பாளுக்கு ப்ரியமானது.
பூலோகத்தில் மந்தார புஷ்பம் உண்டா என்றால்,
சில நிகண்டுகளில் வெள்ளெருக்க மலர் இருக்கிறதே,
அதைத்தான் மந்தாரம் என்று சொல் லப்பட்டிருக்கிறது. இது
சிவபெரு மானுக்கு மிகவும் ப்ரீதியானது. வெள்
ளெருக்கஞ்சடைமுடியான் என்றே அவருக்குப் பெயர்.
தன்னுடைய ஜடா முடியில் வெள்ளெருக்கம் மலர்களைச்
சூடிக்கொண்டவராக இருப்பவர். அவருக்குப் பிடித்த
மலர்கள் அம்பாளுக்கும் பிடிக்கும் என்பதால் மந்தார
குஸுமப்ரியா. வெள் ளெருக்கு மலர்களில் ப்ரீதி கொண்
டவள்.
வீராராத்யா - வீரர்களால் ஆராதிக்
கப்படக்கூடியவள்.
விராட்ரூபா - எல்லாவற்றையும்
தன் னுள்ளே அடக்கிக்கொண்ட விச்வ ரூபமாக இருக்கக்
கூடியவள்.
விரஜா - எந்தவிதமான பாபமோ துக்கமோ
இல்லாதவள்.
விச்வதோமுகி - பல முகங்களைத் தரித்
தவள். இந்த விச்வத்தைப் பல விதமாகப்
பார்க்கக்கூடியவள், பலவித நிலைகளில் பார்க்கக்கூடியவள்
விச்வதோமுகி.
பிரத்யக்ரூபா - நாம் உள்முகமாகப்
பார்க்கிற போது தன்னுடைய ரூபத்தை நமக்கு வெளிப்
படுத்துகிறவள் பிரத்யக் ரூபா. இது ஏற்கெனவே இன்னொரு
திருநாமத்தில் வந்தது - பிரத் யக்சிதி என்று வந்தது.
சித் ஸ்வரூபமாக அம்பிகை இருப்ப தால், உள்முகமாகப்
பார்க்கிறபோது பிரத் யக்ஷமாகத் தெரிகிறாள். எனவே
பிரத்யக் ரூபாவாக இருக்கிறாள்.
பராகாசா -
தகராகாசமாக இருக்கக்கூடி யவள் - பராகாசமாக, பெரிய
ஆகாசமாக, பரமாத்ம ஆகாசமாக இருக்கக்கூடியவள்.
பிராணதா - பிராணனைத் தரக்கூடி யவள்; நமது பிராணனாகவே
இருக்கக்கூடி யவள். பிராண ரூபிணி - பிராணத்தின்
வடிவமாகவும் இருப்பவள்.
மார்த்தாண்டபைரவாராத்யா
- மார்த்தாண்ட பைரவரால் ஆராதிக்கப்படக் கூடியவள்.
மார்த்தாண்ட பைரவர் என்பவர் சிவனுடைய அம்சம். அந்த
தேவரால் வணங்கப்படுகிறவள் அம்பாள்.
ராஜ்ய பரிவாரங்கள்
மந்த்ரிணீன்யஸ்த
ராஜ்யதூ: மந்திரிணி யிடம் தனது ராஜ்ஜியத்தைக்
கொடுத்து, அவள் அதைப் பார்த்துக்கொண்டு
பரிபாலிக்கும்படி செய்பவள். இதனையும் நாம் ஏற்கெனவே
பார்த்திருக்கிறோம். பண்டாசுர வதத்துக்குப்
புறப்பட்டுப் போகையில் ஷ்ரீலலிதாம்பிகையுடன்
மந்த்ரிணீயும் அச்வாரூடாவும் வரு கிறார்கள்.
மந்த்ரிணிக்கு ஷ்யாமளை என் றொரு பெயர் உண்டு. சங்கீத
ஷ்யா மளை, ராஜ ஷ்யாமளை என்றும் அழைக்கப்படுகிறாள்.
இவளி டம்தான் தனது ராஜரீக பொறுப்புகளையெல் லாம்
கொடுத்திருக்கிறாள் அம் பாள். அச்வாரூடா சைனியத்தைப்
பார்த் துக்கொள்கிறாள். இரண்டு பேரும் அம்பாள்
அருகிலேயே இருந்து பொறுப்புகளை நிர்வகிக்கிறார்கள்.
த்ரிபுரேசி -
முப்புரங்களின் ஈசுவரியாக இருக்கக்கூடியவள்.
ஜெயத்ஸேனா - வெற்றியுடன் கூடிய சேனைகளை உடையவள்.
மமந்த்ரிணியில் ஆரம்பித்து, திரும்பவும் ஒரு
தொகுப்பாக நாமங்கள் அமைந்துள்ள தைப் பார்க்கலாம்.
அடுத்தடுத்து வருபவை ராஜ்ய பரிபாலனத்தைப் பற்றிச்
சொல்லக் கூடிய திருநாமங்கள் என்பதை நாம் கவனிக்க
வேண்டும்.


"பொங்கல் வாழ்த்துகள் ஸார்"- வரவேற்கிறார்
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பாலபாரதி.
இடம் திண்டுக்கல் மாவட்ட சி.பி.எம். அலுவலகம்.
பொங்கல் எப்படிங்க போயிட்டிருக்கு?
"திண்டுக்கல்ல முன்பெல்லாம் பொங் கலுக்கு ஒரு
மாசத்துக்கு முன்னாடியே அந்தப் பரபரப்பு தொற்றிக்கும்.
பக்கத்துக் கிராமங்கள்லேருந்து சாரை சாரையாக வரு
வாங்க. வீதிகளும் மார்க்கெட்டும் கொண்
டாட்டத்துக்குரிய இடமா இருக்கும். இப்போ நீங்களே
பாருங்க... பொங்கல் அன்னைக் குக்கூட கரும்பு
விக்கறாங்க. ஒரு மாசத் துக்கு முன்னாடியே பொருட்களை
வாங்கிக் கிட்டிருந்த வாங்கும் திறன் என்னாச்சுன்னு
தெரியலை. திண்டுக்கல் தக்காளி உலக ஃபேமஸ். ஆனால்,
மாசத்துல மூணு நாலு தடவை அதோட விலை ஏறி - இறங்குது.
ஏன் விலைவாசியைக் கட்டுக்குள்ள வைக்க முடியலை இந்த
அரசாங்கத்தால. இதை யெல்லாம் செய்யாம இரண்டு ரூபாய்
அரிசி மட்டும் விலை குறையாம பாத்துக்கறாங்க. இதுக்கு
ரெண்டு காரணங்கள். ரெண்டு ரூபாய் அரிசிதான் வோட்டா
மாறும். பினாமி கள் கடத்தவும் சரியா இருக்கும். விலை
வாசியைக் கட்டுப்படுத்தாம பாலம் கட்டி னோம், ரோடு
போட்டோம்னு சொல்றது எந்தவிதத்துல சாதனை?"
பஞ்சாலைகள் அதிகமான மாவட்டம் திண்டுக்கல்
தானே?
"ஆரம்பத்துல திண்டுக்கல் வந்து
பஞ்சாலைகள் ஆரம்பிச்சாங்க திருப்பூர்க் காரங்க. இப்படி
ஆரம்பிச்ச 150 பஞ்சாலை கள்ல கூலி ஒரே மாதிரி இல்லை.
சில இடங்களில் 90 ரூபாயும், சில இடங்களில் 180
ரூபாயும் கொடுத்துட்டு இருந்தாங்க. 1990களில் வந்த
தொழிலாளர் சட்டத்தால ஆயிரம் தொழிலாளர் இருந்தாத்தான்
தொழிற்சங்கத் சட்டத்துக்குள் தொழிலாளர்களைத் திரட்ட
முடியும் என்பதால், அந்த வாய்ப்பும் நழுவிப் போய்
தொழிலாளர்கள் நலம் பாதிக்கப்படுகிறது. திண்டுக்கல்
நோக்கி திருப்பூர்க் காரர்கள் வந்தது போய், திருப்பூரை
நோக்கிப் போகிற அவலம் இப்போது நிகழ்கிறது. பூட்டும்
அப்படித் தான். திண்டுக்கல் பூட்டுக்குப் பெரிய பூட்டு
விழுந்துருச்சு. நகராட்சியைச் சுற்றி
குழிபறிக்கப்பட்டு ரோடு போடறோம். சாக்கடை
தூர்வார்றோம்னு கமிஷன் வாங்கி கல்லா கட்டுறாங்க.
திண்டுக்கல் நகராட்சி யில குடிதண்ணீர்ப் பஞ்சம்
அதிகம். இரண்டு ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணி
விக்கறாங்க. திண்டுக்கல் நகராட்சிக்குன்னு குடிதண்ணீர்
வசதிக்காக ஒதுக்கப்பட்ட காமராஜர் குடிநீர்த் திட்டம்,
வைகை பேரணைத் திட்டம், இதையெல்லாம் பத்தி ஒரு
முறையாவது நகரசபையில் ஆளுங் கட்சியா இருக்கற தி.மு.க.
கவலைப் பட்டிருக்குமா... அவங்களுக்கு கக்கூஸ்
கட்டணும்... கலெக்ஷன் வரணும்."
திண்டுக்கல் நகராட்சி சுதாதாரம் இவ்ளோ மோசமா
இருக்கே...?
"உண்மைதாங்க. இந்த
விஷயத்துல நகராட்சியும் சரி... மக்கள் பிரதிநிதியா
இருக்கற நாங்களும் சரி... கடுமையான தோல்வியைச்
சந்திச்சிருக்கோம். சொல் வதற்கே கூச்சமாதான் இருக்கு.
ஆனால், உண்மை இதுதானே! பாதாளச் சாக் கடையை பதினெட்டு
மாசத்துல போட்டு முடிச்சுடணும். இன்னும் முடியலை.
முடிஞ்சதுக்கு அப்புறம்தான் தெரியும்; சாக்கடை மேல
ஓடுமா... கீழ ஓடுமான்னு. பஞ்சாலைக் கழிவு நீர்
வேடச்சந்தூர் வரைக்கும் போறதால் விவசாய நிலங்கள்
பாதிக்குது. அதனால விவசாயப் பொருட் களின் உற்பத்தி
அளவு குறையுது. இன்னொரு உண்மையைச் சொல்லணும்னா
அ.தி.மு.க. ஆட்சியில இருந்த விலைக் கட்டுப்பாடு
தி.மு.க. ஆட்சியில் இல்லாமல் போனது அதிகார மையங்களின்
ஆதிக் கத்தினால்தான்."
சுற்றுலாவுக்கு
ஏதுவான மாவட்ட மாச்சே?
"திண்டுக்கல்
மாவட்டம் மழை மறைவுப் பிரதேசம் என்று ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். சுற்றி நிற்கும் மலைகள் மழையைப்
பொழியவிடாமல் தடுத்து நிறுத்தி விடுகின்றன.
கொடைக்கானல், பழநி இருப்பதனால்தான் திண்டுக்கல்
மாவட்டம் கொஞ்சம் செழிப்பா இருக்கறது மாதிரி தோணுது.
அவை மட்டும் இல்லைன்னா ரொம்பக் கஷ்டம்."
என்ன பண்ணனும்?
"மூடியிருக்கற
தொழிற்சாலைகளைத் திறக்கணும். விவசாயப் பொருட்கள்
உற்பத்தி சார்ந்த, குறிப்பா, மாம்பழம், தக்காளி,
நிலக்கடலை சார்ந்த தொழிற் சாலைகள் வரணும். முதல்ல
திண்டுக்கல் மாவட்டத்தைச் சுத்தப்படுத்தணும். அர
சாங்கத்தின் சார்பா பெரிய கல்வி நிறு வனங்கள் வரணும்.
வந்த ஒரு கல்வி நிறுவனத்தையும் அமைச்சர் நத்தம் விஸ்வ
நாதன் கொண்டு, போயிட்டார்" என்று பேசிமுடித்துவிட்டு
வியர்வையைத் துடைத் துக் கொள்கிறார் பாலபாரதி
எம்.எல்.ஏ.


மனசு மயங்கும் மாலை வேளை. திருச்சி, அஜந்தா
ஹோட்டல் கூட்ட அரங் கில் குவியத் தொடங்கினர் கல்கி
வாசகர்கள். இந்திரா காந்தி கல்லூரி மாணவிகள்
தமிழ்த்தாய் வாழ்த்து பாட, இனிதே தொடங்கியது விழா.
அதிலிருந்து சில துளிகள்...
டூ "கல்கி வார இதழ்
மீது, வாசகர்கள் வைத்திருக் கும் அன்பு மிக உயர்வா
னது. உங்கள் ஊரில் நடக் கும் எங்கள் விழாவுக்கு வருகை
தந்திருக்கும் வாசக நெஞ்சங்களையும் முகவர் களையும்
`குட் நியூஸ் க்வீன்' திருமதி.கே.மீனா அவர்களையும்
வருக வருக என வரவேற்கிறேன்" என தமது வரவேற்புரையில்
குறிப்பிட்டார் ஆசிரியர் சீதா ரவி.
டூ
"சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையுடனும் தேச நலன்
சார்ந்தும் சமூ கப் பொறுப்புடன் இயங்கி வரும்
பத்திரிகை கல்கி. அதன் வாசகர் வட்ட விழா வில்
கலந்துகொள்வது எனக்குப் பெருமை. பள்ளி மாணவனாக
திருச்சிக்கு வந்து சேர்ந்தார் அமரர் கல்கி.
பால்யத்தில் அவருக்கு சுதந் திர வேட்கை அதிகம்.
படிப்பதில் இடை நின்று, சுதந்திரப் போராட்டக் களத்தில்
இயங்கினார் கல்கி. ஓராண்டு சிறைவாசம். அங்கு தமது
முதல் குறுநாவலை எழுதினார். பள்ளி மாணவனாக
வந்திருந்தவரை, பத்திரிகை உதவி ஆசிரியராக சென்னைக்கு
அனுப்பி வைத்தது திருச்சி!" எனக் குறிப்பிட்டார்
இந்திராகாந்தி கல்லூரி முதல்வர் டாக்டர் கே.மீனா.
டூ வார்த்தைப் பூக்களைச் சரமாகத் தொடுத்து,
நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார் கார்த்திகா.
திருச்சி மாவட்டச் சிறப்பிதழ்கள் குறித்தான வாசக
விமர்சனக் கடிதங்களில் சிறந்த இரண்டினைத் தேர்வு
செய்து வாசித்தார், உதவி ஆசிரியர் கதிர்பாரதி.
டூ சிறந்த விமர்சனக் கடிதம் எழுதிய இந்திராகாந்தி
கல்லூரி மாணவிகள் ஐஸ்வர்யா, சாந்தி இருவருக்கும்
சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது.
டூ முகவர்கள்
மாறன், ஆண்டியப்பன், ரெங்கநாதன், சரவணன் மற்றும்
முகமது அலி ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள்
வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்த வாசகர்
வெங்கடராமன் தஞ்சாவூர் ஓவிய மகாலெட்சுமி படத்தினை,
ஆசிரியருக்குப் பரிசாக அளித்தார்.
டூ
"வேர்களின் விஸ்தாரத்தைப் பொறுத்துத்தான், ஒரு
தாவரத்தின் பசுமை விரிவு பெறுகிறது. எங்களின் வேர்கள்
நீங்கள்தான்" எனக் கூறி வாசகர் கலந்துரையாடலைத்
தொடங்கி வைத்து வழிநடத்திச் சென்றார், உதவி ஆசிரியர்
அமிர்தம் சூர்யா.
டூ `கல்கி - கல்கியாகவே
இருக்கிறது. மன நிறைவு தருகிறது' என்றார் எழுத்தாளர்
ரிஷபன். `மாற்றம் தேவை இல்லை!' என்றார் எழுத்தாளர்
ஆங்கரை பைரவி. `முழுப்பக்க வண்ணப் படங்களைத்
தவிர்த்து, படைப்புகளைக் கூடுதல் ஆக்க லாம்' எனக்
கோரிக்கை வைத்தவர் பொன் மலை ஆர்.பிரகாஷ். `சமூக
அவலங்களைச் சுட்டெரிக்கும் பீரங்கி - கல்கி' என முழங்
கினார் டோல்கேட் காமராஜ். `ரொம்ப வரு ஷமா
எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும், புதிதாக எழுத
வருபவர்களுக்கும் சம அள வில் வாய்ப்பு அளிக்க
வேண்டும்!' என வேண்டுகோள் விடுத்தார் கிரிஜா மணா ளன்.
டூ "கல்கி திருச்சி மாவட்டச் சிறப் பிதழில்,
துவாக்குடி-அரியமங்கலம் நாற்கர சாலையில் சர்வீஸ் ரோடு
போடப்படாதது குறித்து, `யமன் சாலை' எனக் கட்டுரை
வெளியானது. அது துறை சார்ந்த உயர் அதிகாரிகள்
பார்வைக்குப் போனது. தற்போது அந்த சர்வீஸ் ரோடு,
குறிப்பிட்ட பகுதி யில் போடப்பட இருக் கிறது. இது
கல்கி பத்திரி கையினால் அப்பகுதிப் பொதுமக்களுக்குக்
கிட் டிய வெற்றி!" எனக் குறிப்பிட்டார் கைலாச நகர்
இமயவரம்பன்.
டூ திருச்சி மாவட்டச் சிறப்பிதழில்
வெளியான புதிர்ப் போட்டிகளுக்கான சரியான விடைகளை
எழுதி, குலுக்கல் மூலம் தேர்வான வாசகர்களுக்குப்
பரிசுகள் வழங் கப்பட்டன. சிறந்த ஸ்லோகன் எழுதிய வாசகர்
வி.சி.வெங்கடேஷுக்குச் சிறப்புப் பரிசும்
வழங்கப்பட்டது.
"பெரிய மாற்றங்கள் தேவையில்லை
என்கிற கருத்து பரவலாகச் சொல்லப்பட் டுள்ளது.
வாசகர்கள் புதிதாக சிற்சில மாற் றங்களை அவையில் முன்
வைத்துள்ளனர். அவற்றை எங்கள் ஆசிரியர் குழு கவ னத்தில்
கொண்டுள் ளது!" என நன்றியுரை யில் கல்கி குழும இதழ்
களின் உதவி ஆசிரியர் ஷ்ரீநிவாசராகவன் கூற, விழா இனிதே
நிறைவு பெற்றது.
- ஷ்ரீரங்கம் திருநாவு


* ஆசியாவில் மிகச்சிறிய நாடு - பரப்பளவு,
மக்கள்தொகை இரண்டிலுமே. * உலக அளவில் 27வது மிகச்சிறிய
நாடு. மக்கள்தொகை அளவில், சிறிய நாடுகள் பட்டியலில்
57வது இடம். * உலகின் மிகவும் உயரக்குறைவான நாடு
என்றும் கூறலாம். (கடல் மட்டத்தை விட சராசரியாக நான்கு
அடி மட்டுமே அதிகமாக இருக்கிறது.) * குறைவான
தாவரங்கள். நிலத்தில் வாழும் மிருகங்களும் குறைவு
தான். ஆனால் கடல்வாழ் உயிரினங்களில் - முக்கிய மாக
மீன்களில் அப்படியொரு வெரைட்டி. திமிங்கல
சுறாக்களுக்கும் மால்டீவ்ஸ் பகுதியில் வசிக்க தனிப்
பிரியம்! * அரசுத் தலைவர் ஜனாதிபதி. ரகசிய
வாக்குப்பதிவின் மூலம் தேர்தல் நடைபெறும். *
முஸ்லிம்களுக்கு மட்டுமே வாக்குரிமை. * மால் டீவ்ஸ்
குடியரசுக்குள் நுழைய முன்னதாகவே விசா பெற்றிருக்க
வேண்டுமென்பதில்லை. குறிப்பிட்ட துறைமுகங்களை அடையும்
வெளிநாட்டினருக்கு, உரிய இமிக்ரேஷன் நிபந்தனைகள்
ஒத்துப்போனால் உடனடியாக நுழைய அனுமதி
அளிக்கப்படுகிறது. முப்பது நாள் விசா எல்லா
வெளிநாட்டினருக்கும் வழங்கப்படுகிறது. சுற்றுலாவை
வளர்ப்பதில் மிக முனைப்பு காட்டுகிறார்கள். * கடலும்
வானமும் இங்கு பல நிறங்களில் வித்தை காட்டுகின்றன.
சுற்றுலா அதிகரிப
்புக்கு இதுபோன்ற இயற்கைக்
காட்சிகள் முக்கிய காரணம். * மாலத் தீவுக்கு `மாலா
த்வீபா' என்ற வேறொரு பெயரும், அதற்கு `தீவுகளின் மாலை'
என்ற பொருளும் உண்டு. * முஸ்லிம் நாடு என்றவுடன் இங்கு
பெண்களுக்கான முக்கியத் துவம் குறித்து சந்தேகப்படத்
தேவையில்லை. சுல் தானாக்கள் நாட்டையே ஆட்சி
செய்ததுண்டு. இப் போதும் அரசுப் பணியாளர்களாக நிறைய
பெண்கள் உண்டு. படிப்பில் மட்டுமல்ல;
பாராளுமன்றத்திலும் பெண்களைக் காண்பது வெகுசகஜம்!