

Tongue cleaner என்று சோல்லப்படும் நாக்கு வழிப் பானைக் கொண்டு
நாக்கைச் சுத்தம் செவது சரியா?"
- எ.நந்தினி, மதுரை
பதில் அளிக்கிறார் பல் மருத்துவர் டாக்டர் ஜெய கிருஷ்ணா:
‘நாக்கை கட்டாயம் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பல் தேத்து முடித்த உடன்
சுத்தம் செய வேண்டும். ஆனால், அதை பல் துலக்கப் பயன்படுத்தும்
(மென்மையான) பிரஷ்களை கொண்டு தான் சுத்தம் செய வேண்டுமே தவிர ஒரு
பொழுதும், mental tongue cleaner கொண்டு செயவே கூடாது. ஏனென் றால்,
நம் நாக்கிற்கு ருசி அறியும் தன்மை கொடுக்கும் taste buds கள்
அழுத்தமான எந்த ஒரு பொருள் பட்டாலும் தேந்து விடும். நமது நாக்கின்
பின் பகுதியில் தான் பெரிய taste budsகள் இருக்கும். அந்த இடத்தில்
தான் நாம் சாப்பிடும் சாப்பாட்டுத் துகள்கள் தங்கி, பல
பாக்டீரியாக்கள் வளர வழி வகுக்கும். அதனால் கட்டாயமாக நாக்கைச்
சுத்தம் செய வேண்டும். சிலர் நாக்கைச் சுத்தம் செயும் பொழுது வாந்தி
வருவது போல் இருக்கிறது எனச் சோல்வார்கள். அப்படிப் பட்டவர்கள், மிக
மென்மையாக நாக்கைச் சுத்தம் செயலாம்.
வலிப்பு நோ எதனால் ஏற்படுகிறது...காக்கா வலிப்பு நோ
பாதிக்கப்படவர்களிடம் சாவி கொத்தைக் கொடுப்பது சரியா?
-
பாலசுப்ரமணியன், சென்னை - 11
பதில்
அளிக்கிறார் மூளை நரம்பியல் மற்றும் பொது மருத்துவ நிபுணர் டாக்டர்
வி. நாகராஜன்.
வலிப்பு என்பது மூளையில் உள்ள செல்களின்
பலவீனத்தால் வருவது. மூளையில் கட்டி அல்லது தழும்புகள் ஏற்பட்டாலும்
வலிப்பு நோ வரும். காக்கா வலிப்பு நோயால் ஒருவர் பாதிப்படையும் பொழுது
அவரை உடனடியாக ஒரு பக்கமாக ஒருக்களித்து படுக்க வைக்க வேண்டும் (அவரது
வாயிலிருந்து பெருகும் உமிழ்நீர், இரைப் பைக்குள் புகாமல்
இருப்பதற்காக), மரத் துண்டை துணியால் சுற்றி அவர்களது பல்லிடுக்கில்
வைக்க வேண்டும், நல்ல காற்றோட்டம் இருத்தல் வேண்டும், எதையுமே
சாப்பிடக் கொடுக்கக் கூடாது. குறிப் பாக சோடா, காபி கொடுப்பது
ரொம்பவும் தவறு. சாவி மற்றும் இரும்புச் சாமான்கள் எதையும் கொடுக்கவே
கூடாது. வலிப்பு என்பது ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் தானாகவே
சரியாகிவிடும். இருபது நிமிடங்களுக்கு மேலாகியும் நினைவு திரும்பாத
பட்சத்தில் மருத்துவமனைக்கு அந்நோயாளியை உடனடியாக அழைத்துச் செல்ல
வேண்டும்.
முகம் பொலிவாகவும், இளமையாகவும் இருக்க என்ன செய வேண்டும்?
- சூர்ய தீபா, தஞ்சாவூர்
பதில்
அளிக்கிறார், வயது நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற ஒரு கூற்றின் படி, மனம் என்பது
எப்பொழுதும் அமைதியாக, அழுத்தம் எதுவும் இல்லாமல் இருக்கும்படி
பார்த்துக் கொள்ள வேண்டும். மனம் அமைதியில்லாமல் இருந்தால் முகத்தில்
உள்ள தசைகளை அது பாதித்து முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
முகத்தை எப்பொழுதும் கடுகடுப்பாக வைத்து கொள்வதும் தவறு. குறிப்பாக
பெண்கள், மருத்துவ ஆலோசனை இல்லா மல், திடீரென உடல் எடையை 10 கிலோ
ஏற்றுவது பிறகு ஓரேடி யாக 15 கிலோவை குறைப்பது போன்ற செயல்களைச் செவ
தால் முகம் எலாஸ்டிக் தன்மையை இழந்து சுருக்கங்கள் தோன்ற
ஆரம்பிக்கும். நாளமில்லா சுரப்பிகள் சரிவர இயங்காமல் இருந்தாலும்,
முகத்தில் சுருக்கங்கள் வரும். மன உளைச்சல், தூக்க மின்மை, கோபம்,
சத்தான உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, கடையில் கிடைக்கும் மேக்
அப் சாதனங்களை உபயோகப்படுத்துவது - இவை எல்லாமே முகத்தில், கண்ணைச்
சுற்றி சுருக்கங்கள் தோன்ற வழி வகுத்து விடும்.

கடுக்காய் மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட தலம்
திருக்குறுக்கை. மயிலாடுதுறை அருகிலுள்ள இந்தத் தலம்,
சிவபிரானின் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று.
தம்மீது மலர்க்கணை எய்த மன்மதனை எரித்த தலம் இது.
திருமாலுக்கு விசேஷமான துளசியைத் தலவிருட்சமாகக்
கொண்டதலம் திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம்
அருகே உள்ளது. இதுவும் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று.
சலந்திராசுரனைச் சம்ஹரித்த தலம்.
கொடி வகையைச்
சேர்ந்த முல்லையைத் தலவிருட்சமாகக் கொண்ட தலங்கள்
என்று, திருமுல்லைவாயில், திருக்கருகாவூர் ஆகியவற்றைச்
சொல்லலாம். புல் இனத்தைச் சேர்ந்த மூங்கிலை தலவிருட்ச
மாகக்கொண்ட தலம், திருவெண்ணெய் நல்லூர். சுந்தரரைத்
தடுத்து ஆட்கொண்ட அருளாளன்; ‘பித்தா பிறைசூடி...’
என்று தமிழ்மாலை பாடச்செய்தவன் ‘கிரு பாபுரீசன்’ என்ற
பெயர் கொண்டு இங்கே தரிசனம் அருள்கிறார். இதுதான்
கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த பதி.
சிவபிரானின் பஞ்ச சபைகளில் ஒன்றான ‘தாமிர சபை’யைக்
கொண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தின் தல
விருட்சமும் மூங்கில்தான். வேணுவனம் என்பது புராணப்
பெயர்.
சிவபிரானுக்கு விசேஷமான வில்வத்தையும்,
வகுள மரத்தையும் தலவிருட்சமாகக் கொண்டது நாச்சியார்
கோயில் என்னும் திருநறையூர். பிரசித்தமான கல்கருட சேவை
இங்குதான். திருமங்கை யாழ்வாரின் அதிகமான பாசுரங்களைப்
பெற்றவர் இத்தலத்தில் உறையும் ஸ்ரீநிவாசப்
பெருமாள்தான்.
‘பஞ்சாரண்யத் தலங்கள்’ என்று,
ஆலங்குடி என்னும் பூளைவனம், திருக் கருகாவூர் என்னும்
முல்லை வனம், பாதிரி வனம் அன்னும் அவளிவ நல்லூர், சமீ
வனம் என்னும் அரித்துவார மங்கலம், வில்வ வனம் என்னும்
திருக்கொள்ளம் பூதூர் (திருக்களம்பூர்) ஆகிய தலங்களைச்
சொல்வார்கள். இவை ஐந்தும் காட்டுத் தலங்கள்.
ஆனால், காட்டையே பகவானாகக் கண்டு வணங்கும்
சிறப்புக்குரியது, நைமி சாரண்யம். ‘தவத்துக்குரிய
சிறந்த பகுதி எது’ என்று காட்ட, பிரம்மன் தர்ப்பைப்
புல்லால் செய்த சக்கரம் உருண்டு விழுந்த இடம். நேமி
என்றால் சக்கரம். அது விழுந்த காடு, நைமிசாரண்யம்.
மகரிஷி வியாசரும், அவரது மைந்தர் சுகப ப்ரம்மமும்
தவமிருந்த இடம். மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற
பெரும் ஞான நூல்கள் தோன்றிய இடம். கடந்த இதழில்
விடுபட்டுப் போன, ‘ஸ்வயம் வ்யக்த’ தலங்களில் இதுவும்
ஒன்று. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது.
சரி;
ஆலயங்கள் தோறும் தலவிருட்சங்களுக்கான அவசியம் என்ன?
‘புல், செடி, கொடி, மரம் என்று
அடையாளப்படுத்துவதும்,
வாசனை, துர்நாற்றம்
என்று பேதப்படுத்துவதும், முட்செடி, சந்தன மரம் என்று
பாகுபாடு காண்பதும் மனித சுபாவம். ஆனால்,
ஈசனைப் பாருங்கள்; எருக்கும், இலந்தையும் கூட
அவனுக்குப் பிரியமானவை. அப்படியொரு மனோபாவத்தை
வளர்த்துக் கொண்டால், உங்களுக்குள்ளும் ஈசனின் ஒளி
பரவத் தொடங்கும்’ என்று உணர்த்துகின்றன
தலவிருட்சங்கள்.
(அடுத்த வாரம்
திருக்குளம்)


காங்கிரஸ் மேடைகளில் பிரசார அணுகுண்டாக இருந்த
தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர்
நெல்லைக் கண்ணன், இப்போதெல்லாம் இலக்கிய மேடைகளில்
மட்டும்தான் காணப்படுகிறார். தமிழ்நாடு காங் கிரஸ்
தலைவர்களுக்கு சுய கௌரவமும் இல்லை; தன்மானமும் இல்லை.
எனவே கருணாநிதி காலில் காங்கிர ஸைக் கிடத்திவிட்டு,
கூட்டணி பலத்தில் வென்று பதவி சுகத்தை அனுபவித்துக்
கொண்டு கோஷ்டி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்"
என்று கனல்கக்குகிறார் நெல்லை கண்ணன்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ்?
இப்போதுள்ள
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை, காங்கிரஸ் தலைவர்கள்
என்பதை விட கூட்டணித் தலைவர்கள் என்று அழைக்கலாம்.
தேர்தலுக்கு தேர்தல் காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பில்
குளிர்காவதால் உழைப்புத் திருடர்கள் என்று கூட
சோல்லலாம். இவர்கள் காங்கிரஸ் அலுவலக மான
சத்தியமூர்த்தி பவனுக்கு செல்கிறார் களோ என்னவோ
கோபாலபுரத்துக்குப் போ கோடி அர்ச்சனை செயவிட்டு
வந்துவிடுவதை கடமையாக வைத்திருக் கிறார்கள்.
இவர்கள்தான் இப்படியென்றால் தில்லியிலிருந்து வரும்
சோனியா காந்தியும், பிரதமரும் அறிவாலயத்துக்குச்
செல்கிறார்களே தவிர, கட்சி அலுவலகம் எங்கே இருக்கிறது
என்றுகூட கேட்பதில்லை. மத்தியில் ஏழு அமைச்சர்களை
வாங்கிக் கொண்டு காங்கிரஸையே மிரட்டிக்
கொண்டிருக்கிறார் கருணாநிதி. இதையெல்லாம் பார்த்து
மனம் வெதும்பிய சமயத்தில் தான் சென்னை வந்த ராகுல்
காந்தி அவசியமில்லாதபோது எதற்கு கருணாநிதியைச்
சந்திக்க வேண்டும்" என்று கேட்ட தன் மூலம் காங்கிரஸை
தலை நிமிர்த்தி வைத்தார். எனவேதான் அவருக்கு ‘தமிழகத்
தில் காங்கிரஸ் என்ன செய வேண்டும்’ என்று
மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருக் கிறேன்.
என்ன செய வேண்டும்?
காங்கிரஸுக்குப் பதினைந்து சதவிகித ஓட்டுக்கள் உண்டு.
இரு திராவிட கட்சிகளுடன் கூட்டு இல்லை என்றால் இன்னும்
ஒரு ஐந்து சதவிகிதம் கூடி, இருபது சதவிகிதம்
காங்கிரஸுக்கு விழும். எனவே கட்சியை பலப்படுத்துகிற
அதே வேளையில் வரும் சட்ட மன்றத் தேர்தலில்
தே.மு.தி.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும்
கொங்கு பேரவை யுடன் இணைந்து காங்கிரஸ் தேர்தலைச்
சந்தித்தாலே 80, 90 இடங்கள் வரை பெற முடியும்.
ராகுலுக்கு இந்தக் கருத்தை எழுதியிருக்கிறேன்.
தில்லித் தலைவர்கள் காங்கிரஸ் அலுவலகத்துக்குப் போக
வேண்டும்" என்று ராகுலுக்கு எழுதிய பிறகுதான் சோனியா
காந்தி கூட சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்றார்.
ராகுலுடைய செயல் திட்டங்கள் மட்டுமே தமிழ்நாட்டில்
காங்கிரஸைத் தூக்கி நிறுத்தும்.
கருணாநிதி - ஜெயலலிதா?
கருணாநிதியை
ஒப்பிடுகிறபோது ஜெயலலிதா இன்னமும் சிறப்பான தலைவர்.
நல்ல நிர்வாகி. ஆனால் அணுகுமுறை வெவ்வேறு. 87 வயது
முதியவர் கருணாநிதி, தமிழ் நாட்டுக்காக என்று சோல்லி
குடும்ப நலத்துக்காக சக்கர நாற்காலியில் தில்லி வரை
சென்று எல்லோரையும் பார்ப்பது மட்டுமல்லாமல் திருமா
வளவன் கட்சித் தொண்டர் வரை அனுசரித்துப் போகிறார்.
ஆனால் ஜெயலலிதா அநாகரிகமாக நடந்து, தேசியத் தலைவரான
சோனியாவையே அவமதிக்கிறார். எல்லோரும் வந்து தன்னைப்
பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார். இவரை விட பெரிய
தேசிய தலைவர்கள் இவரை அவ்வாறு சென்று பார்க்க
வேண்டுமா? எம்.ஜி.ஆர். செல்வாக்கில் கட்சி நடத்திக்
கொண்டிருப்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.
கலைஞரின் சாதனைகள்?
இலவசங்கள்
கேலிக்கூத்து. ஒரு கையால் இவற்றைக் கொடுத்துவிட்டு,
டாஸ்மாக் மூலம் பிடுங்கி, ஏழை மக்களை
ஓட்டாண்டியாக்கிவிடுகிறார். குடிதண்ணீர், மின்சாரம்
போன்ற அடிப்படை கட்டுமானங்களில் ஒரு முன்னேற்றமும்
இல்லையே. சென்னையில் மின் சாரம் கொடுத்து விடுகிறார்.
மற்றபடி தமிழ்நாடு இருட்டில் அல்லவா இருக்கிறது. நிதி
நிலைமை படுமோசம். ஆட்சி மாறினால் எல்லாம் அம்பலமாகும்.
- ப்ரியன்


லாஜிக் பார்க்கிறேன்னு ரிசர்ச் ஸ்டூடண்ட்டாக
எல்லாத்தையும் குறுக்குக் கேள்விக் கேட்டுக் குடையக்
கூடாது. அப்புறம் சிரிக்கிறதுக்கும் ரசிக்கிறதுக்கும்
லைப்பில் சீன் இல்லாம போயிடும். மண்ணோடு மனசையும்
இணைச்சு வாழும் அந்த செக்கு ஓட்டும் விவசாயிக் கிட்ட
கொஞ்ச நாள் இருந்து படிச்சுட்டு வான்னு எம்.ஏ. படிச்ச
பையனை அனுப்பி வெச்சாரு ஒரு அப்பா. போனான். மாடு
பாட்டுக்குத் தானே சுத்துது. விவசாயி அவர் பாட்டுக்கு
வேலை செய றாரு. ரெண்டு பேருக்கும் சம்பந்த மில்ல. இவன்
கேட்டான். மாடு நிற்காம சுத்துச்சுன்னு எப்படி
உங்களுக்குத் தெரியும். அது உங்கள ஏமாத்திடுச்சுனா?
பெரியவர் சோன்னார், அதனாலதான் அது கழுத்துல
மணி கட்டி வெச்சிருக்கேன். ஓசையை வெச்சிக்
கண்டுபிடிப்பேன்.’
நம்ம ஆளு அடிச்சான்
லாஜிக்கா... ‘ஒரே இடத்தில் நின்னு ரெஸ்ட்
எடுத்துக்கிட்டு கழுத்த மட்டும் ஆட்டுனா எப்படிக்
கண்டுபிடிப்பீங்க?"
பெரியவர் சிம்பிளா
சோன்னாரு, ‘அதனால தான் தம்பி அதை நான் எம்.ஏ. படிக்க
வைக்கல’ன்னு.
இப்படி, சிரிப்பான கதையில்
இருந்து கடவுளின் மூவ்மெண்ட் என்னென்னு கத்துக்கணும்.
மூவ்மெண்ட்னு சோன்னதும் ஒரு கதை ஞாபகத்தில் வருது.
ஊட்டியில் ஒரு ஷூட்டிங். டிசம்பர் மாசம். நல்ல தடியான
குளிரு. நைட்ல ஷூட்டிங்கின்னு எழுப்பிடுவாங்க.
நடுக்கத்தை வெளியே காமிக்காம நடிக்கிறதுதான் நெஜமான
நடிப்பு. இந்த சினிமா உலகத்தில் நடிப்புக்கு அப்பால
எந்தப் பதவி உயர்வும் இல்லாம சிவனேன்னு, எப்படித்
தொடங்கினாங்களோ அப் படியே இருக்கக் கூடிய ஆளுங்க
உண்டு. இந்த வார நாயகன் அப்படிப்பட்டவர்தான். பேர் :
கிருஷ் ணன். முக்கிய அடையாளம் : முன்னால ரெண்டு பல்லு
நீட்டிக்கிட்டு இருக்கும். விசேஷ குறிப்பு: கண்ணு
ரெண்டும் வெளிய வந்து ‘என்னான்னு’ எட்டிப் பார்க்குற
மாதிரி பேந்த பேந்த முழிக்கும். இப்போ ஊட்டியில ஒரு
மலை உச்சியில ஷூட்டிங். உங்க இஷ்டத்துக்கு எல்லாம் ஏறி
எறங்க முடியாது. மேலே வர ஒரு மணி நேரம் ஆகும். இறங்க
அரை மணி நேரம் ஆகும். காலை அஞ்சுமணிக் கெல்லாம்
அஸெம்பிள் ஆயிட்டோம். ‘ஒன் அண்ட் டூ’ எல்லாம் மலை
உச்சியில மரத்துக்குப் பின்னால காத்தோட்ட மாத்தான்.
அப்போல்லாம் கேரவேன் செட்டப் கிடையாது. கடைசி நாள்
க்ளைமாக்ஸ் காட்சி. எல்லோருக்கும் அசதி. ஃபைட் காட்சி.
மத
ியம் மணி மூணு. பார்த்தா அப்பத்தான் தெரியுது.
துப்பாக்கி யும் பைனாக்குலரும் மிஸ்ஸிங்!
எடுத்துக்கிட்டு வரப்போன ஆளைக் காணோம். டைரக்டருக்குக்
கோபம், செம டென்ஷன். ‘எங்கேயா துப்பாக்கி
பைனாக்குலர்?’னு கத்தினாரு. துப்பாக்கியும்
பைனாக்குலரும் எடுக்க கீழே போனவனுக்கு வயிறு
சரியில்லை. அதைச் சோல்ல மலை மேலே வந்த கிருஷ்ணன் அண்
ணன் மீதுதான் கோபத்தைக் கொட்டினார் டைரக்டர். உதடு
அசைவை வைச்சுதான் கிருஷ் ணன் புரிஞ்சிப்பார். லிப்
மூவ் மெண்டுதான். ஏன்னா அவ ருக்குக் கொஞ்சம் காது
மந்தம்.
மலைமேலே ஓடி வந் ததிலே கிருஷ்ணன்
அண்ணனுக்கு மூச்சு கன்னாபின்னான்னு வாங்கி, அவர் உடம்
புல மொத்தம் உகூ டிபார்ட்மெண்டும் டிராஃபிக் ஜாம்
ஆகியிருந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் நிதானமா சோன்னாரு
கிருஷ்ணா... லேட்டாகுது. நீ போ பைனாக்குலரையும் அந்தத்
துப்பாக்கி யையும் எடுத்துட்டு வந்துடுப்பா. இன்னும்
கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடும் ப்ளீஸ்." கிருஷ்ணன்
முகத்துல கண்ணபரமாத்மா கணக்கா புன்சிரிப்பு. சார்
அப்படியெல்லாம் சோல்லாதீங்க. நான் போ எடுத்துட்டு
வர்றேன்"னு சோல்லிட்டு கீழே இறங்கி ஓடினார். டைரக்டர்
முகத் தில் கொஞ்சம் நிம்மதி. கிருஷ்ணன்
சின்சியாரிட்டியைப் பத்தி அவருக்குத் தெரியும்.
டைரக்டர் படத்தில் எல்லாத்தி லேயும் கிருஷ்ண அண்ணன்
இருப்பாரு. நேரமாயிக்கிட்டே இருக்கு. விடியற்காலை
நான்கு மணி. கிருஷ்ணனைக் காணோம். ஒருவேளை இவருக்கும்
வயிறு கலக்கிக் காலை வாரி விட்டுடுச்சோ? ஒருத்தருக்
கொருத்தர் ஆறுதல் சோல்லிக்கிட்டாங்க. ஸ்டண்ட் மாஸ்டர்
ஒவ்வொருத்தரையா திட்ட ஆரம்பிச்சார். நேர்மையான, நல்ல,
ஆபத்பாந்தவனான கிருஷ்ணனுக்கு ஏதாவது... கால்
தடுக்கி... மலைமேலிருந்து... பழி நம்ம மேலே
விழுந்துடுமோ?- பதற்றமானார் டைரக்டர். எழுந்து நின்னு
ரெண்டு கையால வாகிட்ட
பாத்திக் கட்டி சத்தம்
போட்டுக் கூப்பிட்டாரு... ‘கிருஷ்ணா... கிருஷ்ணா’.
மகாபாரதத்துல துச்சாதனன் புடைவையை உருவினதும் பாஞ்சாலி
சத்தம் போட்டு கத்துனது மாதிரி! என்ன ஆச் சர்யம்...
டைரக்டரின் பூர்வ ஜென்ம புண்ணியம். நம்ம கிருஷ்ணன்
பிரசன்னமாயிட் டார். எல்லார் முகத்திலேயும் சந்தோஷம்.
ஒரு பெரிய டிரேயில எல்லாத்தையும் எடுத்து
வந்திருந்தார் கிருஷ்ணன். டைரக்டர் கிருஷ்ணன்
பக்கத்துல போ சந்தோஷமா தோளைத் தட்டிக் கொடுத்து
‘ஆயிரம் இருந்தாலும் கிருஷ்ணன் போல வராது’-ன்னார்.
கிருஷ்ணன் முகத்துல ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.
முன்பல்லு ரெண்டும் சல்யூட் அடிக்குற மாதிரி
இருந்துச்சு. மாஸ்டர் அவசரப்படுத்தினார். சிரிச்சது
போதும் சீக்கிரம் எடுபான்னு. டிரே மேல இருந்த துணிய
நீக்கினவரு அதிர்ச்சியில ஆடிப் போயிட்டாரு. டிரேயில
வட்ட வட்டமா பைனாப்பிள் கட் பண்ணி இருக்கு. கூடவே ஒரு
பிளாஸ்க். அதுல சூடா சுக்கு காஃபி.
கிருஷ்ணண்ணன் உற்சாகமாகச் சோன்னார்...
சுக்கு
காஃபி போட்டுட்டேன் சார்... இதோ பிளாஸ்க்ல ஃபுல்லா
இருக்கு... ஆனா பைனாப்பிளுக்குத்தான் லேட்டு. எந்தக்
கடையும் திறக்கல. கடைசியா திண்ணையில தூங்கிட்டு இருந்த
தள்ளு வண்டிக்காரனை எழுப்பி பைனாப்பிளை கட் பண்ணிக்
குடுக்கச் சோன் னேன். முன்னூறு ரூபா வாங்கிட்டான்
ஸார்" என்றார். ‘ம்ம்... சுக்கு காஃபியை என் தலையில
ஊத்து’-ன்னு தலை மேல வைச்சு உட்கார்ந்தார் டைரக்டர்.
அதிகாலையில எல்லாரும் சிரிக்க, அந்தக் குளிர் குடு
குடுன்னு ஓடிடுச்சு. கிருஷ்ணன் மட்டும் பேந்த பேந்த
முழிச்சுக்கிட்டு நின்னார்.
வாழ்க்கையில
யோசிச்சு யோசிச்சு வைக்கிற மூவ்மெண்ட்டே முழுக்க
காலைவாரிடுது. லிப் மூவ்மெண்ட் ஐம்பது சதவிகிதம்
மாறிடுச்சு - பைனாக் குலர் பைனாப் பிளாவும்,
துப்பாக்கி சுக்கு காஃபியாவும். வன்முறையான க்ளைமாக்ஸ்
எதுக்குன்னு இந்தக் கலிகால கிருஷ்ணன் வளமான முடிவை
காமிச்சாசரோ என்னவோ?
(தொடரும்)


1. ‘சிக்ஸர் மேரேஜ்’ தோனி -சாக்ஷி பத்தி அவ்வளவு
அகலமா, ஆழமா எழுதினீங்களே. அம்மணி வந்த நேரத்தில் தோனி
200 கோடிக்கு புக்கிங் ஆயிருக்காரே இதை எழுதியிருக்க
வேண்டாமா? இதையெல்லாம் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணணும்.
- எம்.ராஜன், மதுரை-10
2 .
பிரகாரங்கள் ‘செல்வர்க்கழகு செழுங்களை தாங்குதல்’
என்கிற தாத் பரியத்தை உணர்த்துகின்றன என்று
ஸ்ரீநிவாசராகவன் சொல்வது வெகு அழகு!
-
சி.அனுஷா, சென்னை
3. வில்லிபுத்தூர்
வைபவம் அட்டையே அசத்தியது.
- நித்யா
பாலாஜி, ஜமீன் பல்லாவரம்
4. ஊர்வசி
கூறும் செதிகள் சரவெடியாச் சிரிக்க வைக்கின்றன.
-ஏ.பி.எஸ். ரவீந்திரன், வள்ளியூர்
5. கவிதை கஃபேவில் வெளியிட்டிருந்த கவிதைகளும்
மணம், குணம், நிரம்பிய ஃபில்டர் காப்பியாக ஈர்த்தது.
-அ.சு.கிருஷ்ணன், புதுச்சேரி-4
6. சிவகாசி/விருதுநகர் பற்றிய தகவல்களை பூவாணம்
பட்டாசுகள் போல் வெடித்துத் தெளித்திருந்தவிதம்
சிறப்பாயிருந்தது.
- சி.மகேஷ், திருச்சி-17
7. ‘மதராசபட்டணம்’ படத்தை நன்கு அனுபவித்து
அசத்தலான விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்
8.
சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு வணிக நிறுவனங்களின்
முதலீடு, மக்களுக்கு லாபம்தான் என்பது அரசின்
தொலைநோக்கு இல்லாத வெறும் சப் பைக்கட்டு. கரும்பை
அழித்து, கஞ்சா பயிரிட்டு லாபம் பெறலாம் என்று நியா
யப்படுத்தினால், அரசு அனுமதிக்குமா?
-
துரை ராஜசேகரன், பொள்ளாச்சி
9.
விருதுநகர் ரைட்டர்ஸ் பகுதியில் இராஜபாளையத்தைச்
சார்ந்த பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா,
குறிஞ்சிசெல்வர் கொ.மா. கோதண்டம்.. ஆகியோரை
இணைத்திருக்கலாம்!
- மதுமிதா, இராஜபாளையம்

ஒரு நாள்.
ஞாயிற்றுக் கிழமை.
நல்ல வெயில்.
கதர்க்குல்லாய். வேட்டி
சட்டையுடன் ஒரு பெரியவர் எங்கள் வீட்டுக்கு முன்னால்
மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்.
“ரங்கராஜன்!” என்று ஒரு கணீர்க் குரல்.
“சிவப்பிரகாசம்!”
அப்பா, வேகமாக வந்தார்.
இருவரும் தழுவிக் கொண்டார்கள்.
“என்னை மறந்து
விட்டாயா ரங்கா?”
அப்பா, எதுவுமே பேசாமல் உள்ளே
போய் சிவப்பிரகாசம் எழுதிய கார்டை கொண்டு வந்து
காண்பித்தார்.
“ம். நான் எழுதியது தப்புத்தான்.
இருவரும் இடத்தையே காந்தி ஆசிரமமாக மாற்றிக் கொண்டுவிட
வேண்டும் உன்னைப் போல!”
இருவரும் இருட்டியதுகூட
தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சு
அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால் காந்தி, தேசபக்தி,
பாரதியார், கோகலே போன்ற சொற்கள் அதில் வந்து விழுந்தன.
நான் அந்தத் தபால் கார்டையே உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தேன்.
“உனக்கு தபால் ரயில் செய்ய
இதைத் தர மாட்டேன்” என்றார் அப்பா சிரித்தபடி.
நான் யோசித்துச் சொன்னேன்:
“இது என்ஜினாக
இருக்கட்டும்ப்பா!”
சிவப்பிரகாசம் கண்களைக்
கூசுகிற மாதிரி வைத்துக் கொண்டு சிரித்தார்.
அப்பா, என்னை வாரி அணைத்துக் கொண்டார்.
தபால்
ரயில் ஓடி மறைந்தேவிட்டது.
அப்பாவும்
போய்விட்டார்.
நாற்பது வயதில் பல சோதனைகளைச்
சந்தித்தாகிவிட்டது.
கல்யாணமாகி பத்து
வருஷங்கள் கழிந்துவிட்டன. குழந்தைப்பேறு உண்டாகவில்லை.
தபால் ரயில் விளையாடுவதற்குக் குழந்தை இல்லையே என்பது
தான் கஷ்டமாக இருந்தது.
மனைவியிடம் என்னவோ
கோளாறு.
போனவாரம் பெரிய டாக்டரிடம் மனைவியை
அழைத்துப் போனேன். ஏகப்பட்ட பரிசோதனைகள். டெஸ்ட்
ரிசல்ட் பேப்பர்களைப் புரட்டிவிட்டு என்னை நிமிர்ந்து
பார்த்தார் டாக்டர்.
“ஐம்’ஸாரி. உங்கள்
மனைவிக்கு குழந்தை உண்டாவது கஷ்டம். கான் ஜெனிடல்
டிஸார்டர். பிறப்பிலேயே பிரச்னை இருக்கு. ஏதாவது ஒரு
குழந்தையைத் தத்து எடுத்துக்கோங்க...”
மெல்லப்
புன்னகைத்தார்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த
என் மனைவியின் கையை ஆதுரத்துடன் பிடித்துக் கொண்டேன்.
அவள் விரல்கள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன.
உடலும் மனமும் சோர்ந்து போனது. அலுவலகம் போகப்
பிடிக்காமல் லீவு போட்டுவிட்டு, வீட்டிலேயே
உட்கார்ந்து விட்டேன்.
எதுவுமே நடக்காத மாதிரி
என் மனைவி மட்டும் அலுவலகம் போய்வந்து கொண்டிருந்தாள்.
வீட்டில் எல்லாம் மந்திர கதியில் நடந்து
கொண்டிருந்தது.
“சார், போஸ்ட்!” - தபால்காரர்.
ஒரு சிறு அஞ்சல் அட்டை.
“வாழை - ஆதரவற்றக்
குழந்தைகள் காப்பகத்துக்கு நீங்கள் அனுப்பி வைத்த
அன்பளிப்பு ஆயிரம் ரூபாய் கிடைத்தது. வரும்
ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுடன் சிற்றுண்டி அருந்த
வருமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம். நன்றி!”
நான் எப்போது ஆயிரம் ரூபாய் அனுப்பினேன்?
குழம்பினேன்!
காலிங்பெல் அழைத்தது.
கதவைத் திறந்தேன். என் மனைவி!
சிரித்தாள்.
“வர்ற ஞாயிற்றுக்கிழமை உங்களை ஓர் இடத்துக்குக்
கூட்டிப் போகிறேன்!”
“தெரியுமே!” - கார்டைக்
காட்டினேன்.
“இந்தக் கார்டைப் பார்த்ததும்
சின்ன வயசில் நீங்க தபால் ரயில் விளையாட்டுப் பத்திச்
சொல்வீங்களே அது ஞாபகம் வந்துவிட்டது!”
“ஆமாம்!” என்னை உற்சாகம் தொற்றிக் கொண்டது.
ஓடிப்போய் கார்டுகளை சேகரித்துக் கொண்டு வந்தேன்.
அவற்றை நெடுக்கு வாக்கில் மடித்து வரிசையாக நிற்க
வைத்தேன்.
“இப்பத் தள்ளி விடு”
என்
மனைவி முதல் கார்டைத் தள்ளிவிட்டாள்.
ரயில்
ஒன்றின்மீது ஒன்று சாய்ந்து விழுந்தபடி போயிற்று.
“ஹையா! ஹையா!”
குழந்தை போலக் குதித்துச்
சிரித்தாள் என் மனைவி.
குழந்தையேதான்!
புடைவை கட்டிய குழந்தை!
எனக்குக் கிடைத்த
குழந்தை!
என் கண் மங்கலாயிற்று.
ரயில்
வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது.

கரூரில் இந்து முன்னணி மாநில மாநாட்டை ஓஹோவென்று
எழுச்சியுடன் நடத்திய மகிழ்ச்சியில் இருக்கிறார் அதன்
மாநிலத் தலைவர் இராம.கோபாலன். எண்பத்தி மூன்று
வயதிலும் ஓவில்லாமல் தொடர் பயணம் மேற்கொள்கிறார்.
பெரியார்தாசனை அடுத்து பல வி.ஐ.பி.கள் மதம்
மாறியபடியிருக்க இப்போது விசாலி கண்ணதாசனும்
அப்பட்டியலில் சேர்ந்திருக்கிறார். இதுபற்றி இராம
கோபாலன் அவர்களைச் சந்தித்து பேசிய போது...
செம்மொழி மாநாடு?
ஆழ்வார்கள்,
நாயன்மார்கள் ஆகியோர் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு
தான் தமிழை வளர்த்தார்கள் என்பது கருணாநிதி உட்பட
எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த மாநாட்டில்
ஆன்மிக அமர்வுக்கு இடமளிக்காதது தமிழுக்குச் செத பெரிய
துரோகம். ஐந்து முறை முதல்வராக இருந்தார் கருணாநிதி
என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அப்படியென்றால்
தமிழை, ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும்,
நீதிமன்ற மொழியாகவும், ஏன் இதுவரை அழுத்தமாக
அமுல்படுத்த முடியவில்லை? உண்மையைச் சோல்லப் போனால்
கருணாநிதி குடும்பத்தினர் முன்னிறுத்தப்பட்டு,
வரக்கூடிய சட்ட மன்றத் தேர்தலுக்காக நடத்தப்பட்ட
மாநாடு.
இந்து முன்னணி மாநில மாநாடு!
கரூரில் கூடிய நாங்கள் முக்கியமாக வலியுறுத்தியது
இந்துக்களுக்குச் சமநீதி; சம உரிமை மற்றும்
சமவாப்புதான். வோட்டு வங்கி அரசியலில் வறுமையில்
வாடும் சிறுபான்மையோருக்கு கல்வி உதவித் தொகை,
வேலைவாப்பில் ஒதுக்கீடு என்றெல்லாம் வாரி
வழங்குகிறார்கள். ஆனால், இந்துக்களில் பொரு
ளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைக் கண்டு
கொள்வதில்லை. ஏன் இந்த பாகுபாடு?
கோயில்களை இந்துக் களிடம் ஒப்படைக்க வேண்டுமா?
கோயில்கள், இந்து சமூ கத்தின் செயல்பாடுகளுக் கான
மையத்தளம். பக்தவத் சலம் காலத்தில் இந்து அற நிலையத்
துறையை ஏற்படுத்தி கோயில்களை அரசே எடுத்துக்கொண்ட
அநியாயம் நடந்தது. கோயில்கள் அயோக்கியர்களின் புகலிடம்
ஆனது. கோயில் செத்துக்கள் கொள்ளை போயின. கடவுள்
நம்பிக்கையில்லாதவர்கள் அறங்காவலர்களாக
நியமிக்கப்பட்டார்கள். நமது தமிழகத்தில் 36441
கோயில்கள் உள்ளன. இவற்றுக்கு நாலே கால் லட்சம் ஏக்கர்
நன்செ, புன்செ, மானாவாரி நிலங்கள் உள்ளன. 22,600
கட்டடங்கள் இருக்கின்றன. வரவேண்டிய குத்தகை மற்றும்
வாடகை பாக்கி 33 கோடிக்கு மேல். முஸ்லிம்களும்
கிறித்துவர்களும் அவரவர் வழி பாட்டுத் தலங்களை
நிர்வகிக்கும் போது இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா?
தெவபக்தி நிறைந்த, ஓவுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள்
மற்றும் சமூகப் பெரியவர்கள் கொண்ட வாரியத்தை உடனடியாக
ஏற்படுத்தி கோயில்களை அதனிடம் ஒப்படைக்க வேண்டும்.
தொடர்ந்து நிகழும் மதமாற்றம்?
இப்போது தலித்துகள் மட்டும் மதம் மாறவில்லை. பிராமணர்,
முதலியார் என்று பல்வேறு இந்துக்கள் பிரிவிலிருந்தும்
மதம் மாறுகிறார்கள். ஆகவே, தீண்டாமை கொடுமைதான்
மதமாற்றத்துக்குக் காரணம் என்ற வாதமும்
அடிபடுகிறது.ஆனால் மதம் மாறிய பிறகும் இவர்கள் ஏழ்மை
நிலை மாறுவதில்லை. சரி, சமூக ஏற்றமாவது கிடைக்கிறதா
என்று பார்த்தால் அதுவும் இல்லை. கிறித்துவர்களில்
மதம் மாறிய தலித்துகளுக்கும் மற்ற ஜாதி
கிறித்துவர்களுக்கும் மோதல் தொடர்கிறது. முஸ்லிம்களில்
உருது மொழி பேசுபவர் உயர்ந்த பிரிவாக
கருதப்படுகிறார்கள். அவர்கள் லப்பை போன்ற தமிழ் பேசும்
முஸ்லிம்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை.
அப்புறம் என்ன சமத்துவ சமுதாயம்? ஆனால் முஸ்லிம்களில்
ஏழையாக இருந்தாலும் மதத்தின் மீது பிடிப்பும்
கட்டுப்பாடும் இருக்கிறது. அவர்கள் தடுமாறுவதில்லை.
ஆனால் இந்து மக்கள் தடுமாறி மதம் தாவுவது பெரிய
அவமானம். இந்த விஷயத்தில் விழிப்புணர்வு ஊட்டுவது
எங்கள் முக்கிய பணி.
எல்லா மதங்களும் அன்பைத்தானே
சோல்கின்றன?
இது மாதிரி பேசிப் பேசியே புத்தி
கெட்டுப் போனான் இந்து. இந்துக்கள் ‘அறத்தினால்’
அழிந்து போகிறார்கள். நாம் நமது பண்பாட்டை,
கலாச்சாரத்தை தெரிந்து கொள்வ தில்லை. இதைச் சாதகமாக
எடுத்துக் கொண்டு மதம் மாற் றும் கிறித்துவர்களை
மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மன்னிக்க மாட்டோம்.
விசாலி கண்ணதாசன் கிறிஸ்துவத்துக்கு மதமாற்றமானது
பற்றி...
அப்பாவின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’
புத்தகங்களை மகளே படிக்கவில்லை என்றுதான் தெரிகிறது.
வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சிக்கு
என்பது போல அந்த மாபெரும் கவிஞருக்கு இப்படிப்பட்ட
மகள். வருத்தப்படுவதைத் தவிர வேறுவழியில்லை. அவர்
அப்பா ‘ஏசுகாவியம்’ எழுதினாரே தவிர கிறித்துவராக
மாறவில்லையே! கண்ணதாசன் ஆவி இவரை மன்னிக்காது.
நித்தியானந்தா?
அவர் சாமியாரல்ல;
யோகமும் தியானமும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்.
காஷ்மீரில் சைவத்தைக் கடைபிடிக்கும் சாதுக்கள்
சிலருக்கு சராசரி வாழ்க்கை விலக்கல்ல. அதைத்தான்
நித்தியானந்தா கடை பிடிக்கிறார். தமக்கு அருளப்பட்ட
சித்திகளைத் தவறாகக் கையாண்டுவிட்டார்.
-
ப்ரியன்

அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச்
சென்றிருந்தாள். வருணை வீட்டில் விட்டு விட்டுக்
கார்த்திகாவை மட்டும் தன்னுடன் அழைத்துச்
சென்றிருந்தாள். மொபைலை வீட்டிலேயே ஞாபக மறதியாக
விட்டுச் சென்று விட்டாள். அவளுடைய ஹேண்ட்பேக் ஹாலில்
மேஜை மீது இருந்தது. வருண் உள்அறையில் உட்கார்ந்து
படித்துக் கொண்டிருந்தான். பாப்பம்மாள் சமையல்கட்டில்
வேலையாக இருந்தாள். சண்முகம் தெரு வாசலில் நின்று
யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். கிருஷ்ணபாரதி
ஓரன்பாமுக்கின் ‘ஸ்நோ’ என்ற நாவலைப் படித்துக்
கொண்டிருந்தான். மொபைல் அடிக்கிற சப்தம் கேட்டு
அங்குமிங்கும் பார்த்தான். அந்த ரிங்டோன்
அவனுடையதில்லை. மனோகரி யுடைய போனின் ரிங்டோன். மூன்று
நான்கு முறை அடித்த பிறகு புத்தகத்தை மூடிச் சோபாவில்
வைத்து விட்டு மனோகரியின் ஹேண்ட்பேக்கைத திறந்து
மொபைலை எடுத்தான். மாமாதான் போன் செய்கிறார். ஒரு
க்ஷணம் யோசித்து விட்டுக் காதில் வைத்துப் பேச
ஆரம்பித்தான்.
“ஹலோ மாமா... நான்தான்
கிருஷ்ணபாரதி பேசறேன்... வணக்கம் மாமா... நல்லா
இருக்கீங்களா? வீட்டிலே எல்லாரும் சௌக்கியமா?” என்று
கேட்டான்.
மருமகனுடைய குரலைக் கேட்டதும்
சம்பந்தம் ஒரு க்ஷணம் தயங்கினார். பிறகு சுதாரித்துக்
கொண்டு பேச ஆரம்பித்தார்.
“எல்லாரும் சௌக்யம்
மாப்பிள்ளை. மனோகரி இல்லையா?”
“அவ வெளியே
போயிருக்கா...”
எல்லோரைப் பற்றியும் விசாரித்து
விட்டு மெதுவாக மனோகரியின் விஷயத்துக்குத் தாவினார்.
மருமகனிடமே இதைப் பற்றி நேரடியாகப் பேசினால் என்ற
அவருக்குத் தோன்றியது. மிகவும் நாசூக்காக விஷயத்தை
ஆரம்பித்தார். மாமாவுக்கு இது எப்படித் தெரிந்தது
என்று முதலில் கிருஷ்ண பாரதி தடுமாறினான். பிறகு
நேற்று வந்து விட்டுப் போன மனோகர்தான் அவரிடம்
சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தான்.
“மனோ
ஏன் இந்த மாதிரி நடந்துக்கிறான்னு எனக்கும் ஒண்ணும்
புரியலே மாமா... அந்தப் பொண்ணு வீடு பக்கத்திலேதான்.
பத்திரிகை விஷயமா கவிதைகள் கொடுக்க வீட்டுக்கு வருவா.
அவங்க அப்பாவெல்லம் கூட நம்ம வீட்டுக்கு
வந்திருக்கார். அப்பாவுக்கு அவரைப் பழக்கம். ஒரு
ஃபேமிலி ஃப்ரெண்ட் மாதிரிதான் மாமா...”
“இதிலே
தப்பா எடுத்துக்கிறதுக்கு என்ன இருக்கு?” என்றார்
சம்பந்தம்.
“அதுதான் மாமா எனக்கும் புரியலே...
அவளைப் பற்றி நெனைச்சாலே ஹிஸ்டீரியா வந்த மாதிரி
கத்துறா. ரெண்டு மூணு நாளா என் கூடப் பேசறதே இல்லை
மனோ. மனோகர் சொல்லியிருப்பானே?”
“ஆமாமா...
சொன்னான்...” என்றார் சம்பந்தம். மனோகரி குழந்தைகளைக்
கூட்டிக் கொண்டு திருநெல்வேலிக்கே வர இருப்பதெல்லாம்
மருமகனுக்குத் தெரியுமா, தெரியாதா என்று யோசித்தார்.
மனோகர் சொல்வதைப் பார்த்தால் விஷயம் ரொம்ப விபரீதமாகப்
போய்க் கொண்டிருக்கிற மாதிரிதான் தோன்றுகிறது. ஆனால்
கிருஷ்ணபாரதி எவ்விதப் படபடப்புமில்லாமல் நிதானமாகப்
பேசியது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“மனோ
என்னதான் சொல்றா?”
“அவகிட்டே பேசியே இரண்டு
மூணு நாளாச்சுது மாமா. என்னைப் பார்த்தாலே அவளுக்குப்
பிடிக்கலை. காலையிலே ஆபீஸுக்குக் கூட அவ என்னோட பைக்லே
வர்றதில்லை...”
“ஏன் வரலைன்னு அவகிட்டே
கேட்டீங் களா?”
“என்னத்த மாமா கேட்கிறது...?
கேட்டா தாம் தூம்னு குதிக்கிறா. என் மன நிம்மதியே
போயிட்டுது மாமா... நான்னு இல்ல இவளாலே வீட்டிலே
யாருக்குமே நிம்மதியில்லாமப் போச்சு... அவ
பண்றதெல்லாம் ரொம்ப இன் ஸல்ட்டிங்கா இருக்கு.
கல்யாணமாகி இத்தனை வருஷத்துக்கப்புறம் என்னைச்
சந்தேகிக்கிறதுன்னா, நான் என்ன பண்ணட்டும் மாமா? என்னை
அவ சந்தேகப்படற மாதிரி நானும் அவளைச் சந்தேகப்பட்டா
என்ன ஆகும்? அவளும் ஆபீஸ்லே பல ஆண்களோட தானே வேலை
பார்க்கறா...?” என்று கொதித்தான் கிருஷ்ணபாரதி.