Kalki 14.03.2010
Designed & Hosted by
 

டாக்டர் ராமச்சந்திரனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மோவாயில் கை வைத்து, தீவிரமாக யோசித்தார். அவரது வீட்டு மொட்டை மாடி யில், பிரம்பு நாற்காலிகளில், அவருடன் அவரது மனைவி கமலாவும் எதிரே சூர்யாவும் அமர்ந்திருந்தனர். சட்டெனத் தமது வளர்ப்பு மகனைப் பார்த்த வர்...

"கல்யாணத்துக்குத் தேதி ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களா?"

"இல்லப்பா. ஆனா அவங் கப்பா சீக்கிரம் முடிச்சுடணும்கிற முடிவோட இருக்கார். இன்னிக் குக் கூட அவங்க அப்பாவும் அவளும் சொந்த ஊருக்குப் போய் இந்தத் தகவலை சொந்தக்காரங்க கிட்ட சொல்லிட்டு அப்படியே தேதி குறிச்சுட்டு வரப் போயிருக் காங்க."

"அப்ப நீயும் அவளைக் கல்யா ணம் பண்ணிக்க முடிவு செஞ் சிட்ட. அப்படின்னா, அந்த அம்மா முத்துலட்சுமி."

டாக்டரின் மனைவி கமலா கோபப்பட்டாள்.

"என்ன நீங்களும் இப்படி யோசிக்கறீங்க. எனக்கென்னவோ அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுன்னுதான் தோணுது..." சூர்யாவிடம் திரும்பி...

"இங்க பாரு சூர்யா, யோசிக் கவே யோசிக்காதே. கல்யாணத் துக்குத் தயாராயிடு."

"இல்லைடி. விஷயம் தெரி யாம பேசாதே. அவனே குழம்பிக் கிடக்கிறான்... நீ வேற... டாக்டர் இப்படிச் சொன் னதும்..."

"மிஸ்டர் ராம் வெய்ட்" கமலா தன் கணவனைப் பார்த்துக் கொஞ்சம் குரலை உயர்த்தினாள். டாக்டர், மனைவியின் குரல் உயர்வதைக் கண்டதும் அமைதி யாக அவளைப் பார்த்தார். எப்போதெல்லாம் அவள் `ராம்' என பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாளோ, அப்போதெல்லாம் அவள் உறுதியாக எதையோ முடிவெடுத்து விட்டாள் என அர்த்தம். கமலா பேசத் துவங்கினாள்:

"சூர்யாவுக்கு முத்துலட்சுமி அம்மா இல்லை. அது அவன் ஃபிரெண்டோட அம்மா. அவங்க சின்ன வயசுல படிக்கும் போது ஏதோ உதவி செஞ்சிருக்காங்க. அவ் வளவுதான். அவங்க பையன் சாவுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கலாம். வெறுமனே அவன் கடிதத்தை மட் டுமே வெச்சுக்கிட்டு முடிவெடுக் கிறது முட்டாள்தனம். அங்க உண் மையில என்ன நடந்ததோ யாருக் குத் தெரியும்? அப்படியே இருந் தாலும் இந்தக் காலத்துல அதை யெல்லாம் ரொம்பவும் பெரிசு படுத்தறது அவ்வளவு நல்லா யில்ல..."

கமலா பேசுவதில் ஓரளவு நியாயம் இருப்பதாக ராமச் சந்திரனுக்கு இப்போது பட்டது. அவளை ஆமோதிப்ப தாகத் தலையை அசைத்தார்.

மேரு எங்கே?

இன்றைக்கு இதுபோலெல்லாம் நிலம் இருக்கிறதா; மலை இருக்கிறதா; கடல் இருக்கிறதா? என்று கேட்டால், அதற்கு ஒரே ஒரு விதத்தில்தான் தர்க்க ரீதியாகப் பதில் சொல்லலாம்.

இன்றைக்கு நாம் அறிந்த விஞ் ஞானத் தொழில்நுட்பத்தில், பூமியின் அடித்தகடுகள் அசைந்துகொண்டே இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள் கிறோம்.

அசைந்துகொண்டே இருக்கக்கூடிய தகடுகள் ஆயிரக்கணக்கான, கோடிக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தன...? அது நமக்குத் தெரியாது! எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்றால், `பாஞ்சியா' என்ற ஒரு கண்டம் இருந் தது என்கிற அளவுக்குத் தெரிந்திருக் கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன், பள்ளிக் கூடங்களில், கண்டங்கள் ஐந்து என்று கற்றுக்கொடுத்தார்கள். இன்று, வட-தென் அமெரிக்காக்களைப் பிரித்துக் கணக்குச் சொல்கிறார்கள். இன்னும் வருடங்கள் செல்லச் செல்ல எப்படி மாறுமோ தெரியாது! ஆனால், ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு கண்டங்களாக இருந் தன; அதற்கும் முன்பு மொத்த நிலப்பரப்பும் ஒரே பரப்பாக இருந்தது. பாஞ்சியா என்று அதற் குப் பெயர். இது இரண் டாகப் பிரிந்தது. வட திசைக்குப் போனது யுரேஷியா என்றும், தென் திசைக்குச் சென்றது கோல் வானா என்றும் அழைக்கப் பட்டன. கோல்வானா பகுதி யிலிருந்து பூமிக்கு அடியில் உள்ள தகடு பெயர்ந்து நகர்ந்து யுரேஷியா பகுதியோடு ஒட்டியது. அப்படி ஒட்டிய பகுதிதான் இந் தியா. அந்த தீபகற்பப் பகுதி போய் யுரேஷியாவில் மோதிய வேகத்தில் இமய மலை உருவாயிற்று. - இது புவியியல் ஆய்வாளர்கள் இன்று ஒப்புக்கொள்கிற ஒரு ஆராய்ச்சி முடிவு. அவ்வாறு மோதிய தாக்கத்தில்தான் இன்னமும் இமய மலை வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆண்டு தோறும் இரண்டு சென்டிமீட்டர் தீபகற்பப் பகுதி தள்ளுவதால் இமய மலையும் கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி உயர்கிறது என்று சொல்கிறார் கள்.

தெரிந்ததும் தெரியாததும்

இந்த பூமித் தகடுகளுடைய அசை வின் விளைவுதான் பூஜ் பகுதியைத் தாக் கிய நில நடுக்கம். அதே மாதிரி, வேறொரு அசைவின் விளைவுதான் சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், அதிலிருந்து தோன்றிய சுனாமியும் - இவையெல்லாம் நிபுணர்கள் சொல்லக்கூடிய விவரங்கள்.

ஆனால், பாஞ்சியாவைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவே இத்தனை வருடங் கள் ஆகியிருக்கின்றன. இன்னும் நம் முடைய ஆராய்ச்சிகள் மூலம் தேடிக் கொண்டே போனால், ஏழு கடல், ஒன் பது பர்வதங்கள் பற்றி உணரமுடியுமோ என்னவோ..? எப்படித் தெரியும்? நமக்கு இன்று ஒரு விஷயம் தெரியவில்லை என்ப தனாலேயே `அவ்வாறு ஒன்று இருந்ததா?' என்று நாம் கேள்வி எழுப்ப முடியாது.

வட்ட மேஜையில் இடம் பெறும் சிறப்பான கடிதத்துக் குப் புத்தகப் பரிசு என அறிவித்து இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடச் செய்துவிட்டீர் கள்!

- பி.கோபி, கிருஷ்ணகிரி-1

"தன்னை உணர்ந்து பேசு வதற்கும் தன்னை மறந்து பேசு வதற்கும் என்ன வித்தியாசம்?" என்ற கேள்விக்கு கிரேஸியின் பதில் தூள்!

- ஏ.பி.எஸ். ரவீந்திரன், நாகர்கோயில

மின்னல் கதைகள் கருத்து மழையில் நனைந்த சுகத்தைத் தந்தன!

- ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி-1

`ஷ்ரீலலிதா' கட்டு ரையில் அம்பாள்களின் படங்கள் தத்ரூபம். கண் களில் ஒற்றிக்கொள் ளும்படி இருக்கின்றன. வேதா அவர்களின் கைத் திறன் வியக்க வைக்கின் றது.

- பி.வி.குப்புசாமி, திருச்சி

திடசித்தம் இழந்து தவறான முடிவைத் தேடிக் கொண்டு, இனி வர(ா)தராஜனாய் மறைந்துவிட்ட சிவப்புத் தோழரின் கறுப்பு முடிவு, வெள்ளை உள்ளங்களை ஈரப்படுத்தி விட்டது!

- அயன்புரம் த.சத்தியநாராயணன

`மகா பெரியவர்' இளைய தலைமுறையிடம் எவ்வளவு தன்னம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை `அருள்வாக்கு' மூலமாக அறிந்து அகமகிழ்ந்தேன்.

- மயிலை கோபி, சென்னை-83

பொம்மை வியாபாரம் செய் யும் ஷோபனா புதுமைப்பெண்தான்!

- சாந்தா ராஜாமணி, சென்னை - 88

கீதா பிரேம்குமார், தார்மீக நெறிக்கு கல்கி பத்திரிகையை உதார ணம் காட்டியது மிகவும் பொருந் தும். பத்திரிகை உலகில் கல்கி தடம் பிறழாமல் தனக்கென தனிமுத் திரைப் பதித்து வருவது என் போன்ற வாசகர்களுக்கு மிகப் பெருமை.

- பிச்சை சுவாமிநாதன், தேதியூர

`பெண்கள் நாட்டின் கண்கள்' என்பர். சாருலதாவின் செயல்கள் புண்களாய் அன்றோ மாறிவிட்டன.

- சி.விஜயாம்பாள், கிருஷ்ணகிரி

அடுத்தவங்க கஷ்டத்தைப் புலம் பல்னு ஒதுக்காதே. அது உனக்கு வந்தால் எப்படியிருக்கும் என்று யோசி." சங்கரி அப்பனின் `மனம் திறந்து' சிறுகதையின் வரிகளில் வாழ்க்கையின் உண்மை புலப் பட்டது.

- சு.இந்துமதி, நெய்வேலி

அமெரிக்கா - இந்தியா செய்துகொண் டுள்ள ஒப்பந்தத்தின் எதிர்கால பாதிப்பு களை தலையங்கத்தில் படித்ததும் மனத் தில் கிலி ஏற்பட்டது!

- என்.சங்கரதாஸ், ஷ்ரீவில்லிபுத்தூர்

அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள், இந்தியா விவசாயத் துறையில் முதலீடு செய்ய அழைக்கப்பட்டால், எதிர்க்கட்சி கள் ஒருங்கிணைந்து எதிர்க்கவேண்டும் என்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளீர் கள். தற்போது விவசாயத்தில் எந்த லாப மும் இல்லை. அமெரிக்ககாரன் வந்தால் விவசாயிகள் கைகொடுத்தே வரவேற்பார் கள்.

- பாவலர் ரா.செல்வன், மதுரை

சுய முன்னேற்றம், மனித நேயம், சுயமரியாதை என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு பாடுபடும் `மனுஷி' அமைப்பு பாராட்டத்தக்கது.

- அய்யாறு எஸ்.வாசுதேவன், சென்னை

தூவாலு வேறு ஒரு காரணத்திற்காகவும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நாடு. வெறும் பெயரைக்கொண்டே கோடிக்கணக்கில் சம்பாதித்த ஏழை நாடு இது.

தூவாலு, நாட்டின் மொத்தப் பரப்பளவே 26 சதுர கிலோ மீட்டர்தான். வாடிகன், நாயுரு இவற்றிற்கு அடுத்ததாக, மிகமிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடு இதுவே தான். ஆக, உலகின் மூன்றாவது மிகச்சிறிய நாடு.

தனது வலைத்தளத்தின் பெயரை '.ணாதி' என்று வைத்துக் கொண்டது தூவாலு. அறிந்தோ அறியாமலோ இந்தச் செயல் அதற்குக் கோடிகளைக் குவித்தது. தொலைக்காட்சி என்பதற்கும் இதுவேதான் சுருக்கம் என்பதால் பல்வேறு பிரபல சேனல்களும் தங்கள் முகவரியில் '.ணாதி' என்பதைப் பயன்படுத்தத் தொடங்கின. இதற்கு ராயல்டியாக தூவாலு கொழுத்த பணம் சம்பாதித்தது. 2000 ஆண்டில் மட்டுமே இப்படி அது ஈட்டிய தொகை 5 கோடி டாலர்கள்!

ஏதோ இயற்கை வஞ்சித்ததை செயற்கையாவது (தொழில்நுட்பம்) ஈடுகட்டியதே என்று தூவாலு மக்கள் நினைத்திருந்தால் தவறில்லை. கனிம வளங்கள் மிகமிகக் குறைவு. சுற்றுலாவின் மூலம் அதற்குக் கிடைக்கும் தொகை, சொன்னால் சிரிக்கக்கூடிய அளவுக்குக் குறைவு. ஒதுக்குப் புறமாக இருப்பதாலோ என்னவோ ஆண்டுக்கு நூறு சுற்றுலாப்பயணிகள் வந்தாலே அதிகம். அப்படி வருபவர் களும் வேறு ஏதாவது நாட்டில் அரசு அதிகாரிகளாகவோ அரசுசாரா அமைப்பின் பணியாளர்களாகவோதான் இருப் பார்கள்.

நாட்டில் நதிகளும் கிடை யாது. ஓடைகளும் கிடையாது. எனவே மழைநீர் சேகரிப்பு மிக மிக அவசியம். ஏற்றுமதி தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் கொப்பரை மட்டும் தான்.

தூவாலுவில் ராணுவமும் கிடையாது. அரசியல் கட்சி களும் கிடையாது.

ஆகா எளிமையான அமைதி யான வாழ்க்கை என்று வியக்க வேண்டாம். 'எளிமை'? உண் மைதான். `அமைதி'? அது எப் படி இருக்கும்? கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த நாடு. இதே வேகத்தில் கடல் மட் டம் உயர்ந்தால் அதிகபட்சமாக அடுத்த ஐம்பது வருடங்களில் நம் பூம்புகார் சந் தித்த விபரீதத்தை தூவாலுவும் சந்திக்கும்.

மனிதர்களை இப்படி வர் ணிப்பதுண்டு. `அவன் சரியான சிடுமூஞ்சி', `அவன் ஆளே அப்படிதாம்பா. பேசுறதுக்கே காசு கொடுக்கணும்', `அவன் ரொம்ப ஜாலியான ஆளு, `எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பேசியே கவுத்துடுவான்', `சரியான சந்தேகப் பேர்வழி', `பயங் கர முன் கோபக்காரன்', `ஒரு நாளைக்கு ஒரு மாதிரி இருப்பான். திடீர்னு மாப்ளேன்னு கட்டிப்புடிச்சி நலம் விசாரிப்பான். திடீர்னு காரணமே இல்லாமே, பார்த் தாலும் பார்க்காத மாதிரி மூஞ்சைத் திருப்பிக்கிட்டுப் போவான்' என்று நம் முடைய காமன்ஸென்ஸை (ஞிணிட்ட்ணிண ண்ஞுணண்ஞு) வைத்து, ஒரு வரின் சுபாவத்தை ஒரு வரி யில் வகைப்படுத்துவதை லேமேன் சைக்காலஜி (ஃச்தூட்ச்ண கண்தூஞிடணிடூணிஞ்தூ) என்கிறார்கள்.

ஒரு தனிமனிதனின் குணாதிசயங்கள், அடிப்படை உணர்ச்சிகள், மனோநிலை, பண்பு கள் மற்றும் நடவடிக்கைகளின் கலவைதான் `ஆளுமை' என் கிறோம்.

இந்தச் சுபாவம், கருவில் நரம்பு மண்ட லம் உருவானதிலிருந்து (‡ஞுதணூணிஞீஞுதிஞுடூணிணீட்ஞுணணாச்டூ) பூமியில் பிறந்து கல்வி, பொருளா தாரம், வாழ்க்கை அனுபவங்கள் என ஒவ்வொன்றின் அதிர்வினாலும் உருக்கொள்கிறது; பாதிக்கப்படுகிறது.

மனிதர்களை குணாதிசயங்கள் (ஞிடச்ணூச்ஞிணாஞுணூண்), பண்புகள் (ஞுட்ணிணாடிணிணண்), உணர்ச்சிகள் (ட்ணிணிஞீ), மனோநிலை மாற்றங்கள் (ஞஞுடச்திடிணிதணூண்), இவற்றின் அடிப்படையில் மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்து கிறது உளவியல். முதல் வகை மனிதர்கள் உஞிஞிஞுணணாணூடிஞி. அதாவது, யதார்த்தத்திலிருந்து எப்போதும் விலகியே யோசிப்பவர்கள்.

இரண்டாம் வகை மனிதர்கள் உட்ணிணாடிணிணச்டூ. இவர்கள் உணர்ச்சிகள் பொங்கி வழியும் வகையைச் சார்ந்தவர்கள்.

மூன்றாம் வகை மனிதர்கள் அணதுடிணிதண். இவர்கள் பதற்ற சுபாவம் கொண்டவர் கள்.

ஒவ்வொரு பிரிவிலும் நான்கு முதல் ஆறு வகையான உட்பிரிவு சுபாவங்கள் உள்ளன. எனவே, இந்த உலகில் உள்ள எந்தவொரு மனிதனும் இந்த பன்னிரண்டு முதல் பதினைந்து வகையான சுபாவங் களுக்குள்தான் அடங்குவான்.

நான்கு திசைகளிலும் கண் ணுக்குத் தெரியாத வேலியிட்டு நெல்லைக் காத்தவர், (`ஏன்? எதற்கு? என்பதைக் கடைசியாகத் தெரிந்து கொள்வோம்), வேணுவனநாதர் என அறியப்பட்ட நெல்லையப்பர். அதனால்தானோ என்னவோ நெல்லையப்பர் கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு இராஜகோபுரங்கள்.

பால் குடம் சுமந்து சென்ற யாதவ குல பக்தனை, தினமும் மூங்கில் முளை உருவில் தடுக்கி விழ வைத்து, இறைவன் தம்மைக் காண்பித்துக்கொண்ட திருத்தலம்.

வேணுவனம் என்றால் மூங்கில் காடு. அங்கே... தம்மை அடையாளம் காட்டிக்கொண்டதால், மூலவருக்கு வேணுவனநாதர் என்பது புராணப் பெயர்.

நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி மாநகரின் மையத்தில் இருக்கிறது. 850 அடி நீளவாக்கிலும், 756 அடி அகலவாக்கிலும் பரப்பளவு கொண்டது திருக்கோயில்.

ஆறு சபைகள் உள்ளன. சிந்து பூந்துறை தீர்த்த சபை. மானூர் ஆச்சரிய சபை. அம்பிகை கோயில் முன்பாக சௌந்திர சபை, கல்யாண சபை. சுவாமி சன்னிதி முன்பாக அழகிய ராஜசபை. சுவாமி சன்னிதியின் வாயு திசையில் தாமிர சபை.

பஞ்ச சபைத் திருத்தலங் களில் தாமிர சபைத் திருத்தலம் இது. இங்கு தரிசனம் தரும் நடராஜர், தாமிர சபாபதி.

"இது எங்கப்பங்காரன் மாடா உழைச்சு மனசு நிறைஞ்சு போட்ட நக... உம் மவேன் உழச்சு ஒரு குன்னுமணி கூட போட்டது கெடையாது. இதைக் கழட்டிக் கொடுக்கிறது நடக்காத காரியம்."

இம்புட்டு பேச்சும் பேசிட்டு ஒப்பாரி வைக்க ஆரம்புச்சுட்டா.

"யாத்தா உன்னைக் கையறுத்து போடச் சொல்லல... எங்கப்பன் சொத்து யாருட்ட கேக்கணும்?"

பொண்டாட்டி முன்னாலே பூசி மெழுகிப் பேசுறான். இடுப்புல சுமந்தவளவிட முந்தியில முடிஞ்சவள பெரிசா நினைக்கிற பய... ம்....

இன்னிக்கி வேணும்னா இது அவன் அப்பன் சொத்தா இருக்கலாம். ஆனா முப்பது வருஷத்துக்கு முன்னால இது செல்லாயி சொத்து. அவளைப் பெத்தவன் சங்கிலியும் சரப் புலியும் போட்டு இவள கட்டி வைக்கல... தன்னை மாதிரி ஒரு சம்சாரிக்கித்தான் மவளைக் கட்டிக் கொடுக்கணும்னு வெறும் பத்து மரக்கா வெதப்பாட்டோட மண்ணுல புரண்ட மாடசாமிக்குக் கெட்டி வைச்சான். மாடசாமி இவளைத் தொட்ட நேரமோ மண்ணைத் தொட்ட நேரமோ தெரியல. நஞ்ச, மேல நஞ்ச புஞ்ச மேல புஞ்சைன்னு சொத்துச் சேர ஆரம்பிச்சுது.

ஆஸ்திக்கு அடுத்தடுத்து அஞ்சு ஆம்பளப் பய பொறந்தாலும் அடிச்சு அழுவப் பொட்ட மவ இல்லாதது ரெண்டு பேருக்கும் வருத்தந்தான். ஓயாம உழைச்ச புருஷன் பெஞ்ச மழையில் காயாம கிடந்த தரையில வழுக்கி விழுந்து செத்துப் போனதை நெனச்சு இப்பவும் தொண்ட அடைச்சுக்கும் செல்லாயிக்கி.

அப்பனுக்கு வைச்ச தீ அரைகுறையா எரியிறப்பவே, சொத்தைப் பிரிச்சு சொவத்தைக் கலைச்சுப் பிச்சுக்கிட்டு மவனுக போயிட்டானுக. ஆத்தாவ யாரு வைச்சுக்கிறதுன்னு கேள்வி வந்தப்ப குலதெய்வமா வந்து அம்பலக்காரரு வழி சொன்னாரு.

"யாரு கடைசி வரைக்கும் செல்லாயியை வைச்சுக் காப்பாத்துறானோ அவனுக்குத்தான் கரையடி பத்து மரக்கா வெதப்பாடு." பெரியவனும் அவன் பொண்டாட்டியும் நஞ்சைக்கு ஆசைப்பட்டு இவளைக் கூட வைச்சுக்கிட்டாக... அது பழைய கதை...

வள்ளலா பால் கறக்குறப் பசுவை வித்து, சுமந்த காளையையும் வித்து, இப்ப கைநிலமும் கைவிட்டுப் போகப் போறத நினைச்சு செல்லாயி நோயில விழுந்துட்டா.

`ஏழை சொல்ல இரப்பாளி கேட்குமா..?' இவ பேச்சு மேகத்துல போற காத்தோட போயிடுச்சு. அப்பன் கொடுத்த நெலம் நகையும் நட்டுமா... சீலத் துணியாவும் போயிடுச்சு.

"என்ன பாவஞ்செஞ்சனோ! இவ கூட கெடந்து மாரடிக்கேன்... நல்லாயிருக்கிறதே பொசுக்கின்னு போயிடுதுக. இது இருந்தும் கெடுத்தேன். செத்தும் கெடுத்தேன்ன கதையா..." - புலம்புற மருமவளை நாக்கப் புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்க வாய் துடிச்சாலும் உடம்புல திராணியில்ல செல்லாயிக்கு.

ஆத்தா, போவப் போற நேரத்துல பெரியவனுக்குப் பாசம் பொத்துக்கிட்டு வருது. பக்கத்துலயும் இருந்து பாடு பாக்குறான். ஆத்தாவைப் பார்க்க மத்த மவனுகளுக்கு ஆசை இருந்தாலும் மதினியோட மலட்டுப் பேச்சுக்குப் பயந்து அந்தி கறுக்குற நேரத்துல அசலூருக்காரன் மாதிரி வந்து பார்த்துட்டுப் போறானுக.

என்னைக்கும் இல்லாத கதையா மருமவ தொழுவத்துல கெடந்த கலப்பையை எடுத்து வௌக்கு மாத்தால தூசித் தட்டுறா. சோறு போட்ட சாமி, சளைக்காம புழுதி புரண்ட மண்ணப் புரட்டி எடுத்து பிழைப்புக்கு வழி காட்டுன கலப்பையை, சீதேவியை... விளக்குமாத்தால அடிக்கிறது பார்த்து செல்லாயோட ஈரக் கொலை கிடந்து துடிக்குது...

"என்னத்தைப் பாக்குற கெழுவி? பாழாப்போற கலப்பைய கீழத்தெரு மாரியப்பனுக்கு விலை பேசியாச்சு. ஐந்நூறு ரூபா... வர்ற தீவாளிச் செலவுக்கு ஆவும்ல...

உங்காத் தாளுக்குத் தங்கல.. பத்ரகாளியா வர்றா..." மருமவ பேச செல்லாயிக்கு வாய் கொளறி வார்த்தையா வருது...

"ஏலேய் நஞ்சையை வித்த... புஞ்சையை வித்த இந்தப் பாவி மவா ஏன்னு கேட்டனா? ஆனா புருஷன் தோள்ல போட்டுச் சுமந்த கலப்பை வெறும் மண்ணை உருட்டிப் புரட்டி நெல்லுஞ் சோளமுமா உண்டாக்குன கலப்பை... அவுகளா பாவிச்சு என் அண்டையிலயே வைச்சுத் தொட்டுத் துலங்குன கலப்பையை வித்தா உங்கப்பனை கூவி வித்ததுக்குச் சமம், நம்ம குடும்பத்து மானத்தையே வித்ததுக்குச் சமம்."

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர்  வாங்குங்கள்.

 
Than kanavan payan paduththiya..... - Dharmapathy, chennai, 3/9/2010
vattamejaiyil idampetra kadith..... - Dharmapathy, chennai, 3/8/2010
Sirandha kadithaththirkku puth..... - avainaayagan, chennai, 3/7/2010
karuppu mudiveithiya sigappu t..... - viyarajan, chennai, 3/1/2010
vattamejaiyin sila kadithangal..... - avainaayagan, chennai, 2/23/2010

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2003-2009, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 (30 lines)
Fax: 91-44-4343 8899
To advertise, contact marketing@kalkiweekly.com