மனிதர்களைத் தேவர்களாக்கக் கூடிய சிறந்த உணர்ச்சிகளுள்
தலை சிறந்தது காதல். வாழ்க்கையில் சிறிது காலமாவது அதை
அனு பவித்தவர்கள் இனிய சுபாவமும், தாராள மனமும்
கொண்டவர்களாயிருப்பார்கள். அந்த உணர்ச்சியை அனுபவித்து
அறியாதவர்களோ அசூயையும் துவேஷம் பொங்கும்
உள்ளத்தினராய் எப்போதும் கடுகடுப்பாகவே இருப்பார்கள்.
குடும்பங்களில் சில மாமியார்கள் தங்கள் நாட்டுப்
பெண்களை அன்பும் ஆதரவுமாய் நடத்துவதையும், வேறு பலர்
நாட்டுப் பெண்களின் வாழ்க்கையே நரகமாகும்படி கொடுமை
செய்வதையும் காண்கிறோம். நன்கு ஆராய்ந்து பார்த்தால்,
அன்பாக நடத்தும் மாமியார் தன் வாழ்க்கையில் காதலை அனு
பவித்தவளென்றும், கொடுமைக்கார மாமியார் அவ்வுணர்ச்சியை
அறியாதவள் என்றும் தெரிய வரும்.
மனுஷ்யர்களுடைய
சுபாவம் முழுவதுமே காதல் உணர்ச்சியினால் மாறுபடுகிறது.
அது அவ்வளவு முக்கிய உணர்ச்சியா இருப்பதனால் தான்
பெர்ட்ரண்டு ரஸ்ஸல் போன்ற இக்காலத்துப் பேரறிஞர்கள்
சிலர், காதலுக்காக மற்ற சட்ட திட்டங்களையெல்லாம்
உடைக்கலா மென்றும், கலியாண பந்தம் உள்பட சமூக சமய
விதிகளையெல்லாம் புறக்கணிக்கலாம் என்றும்
அபிப்பிராயப்படுகிறார்கள். இப்போதும் இவ்வாறு சமூக சமய
விதிகளைப் புறக்கணித்துச்
செல்லும்
காதலர்களைப் பற்றி நாம் சில சமயம் கேள்விப்படுகிறோம்.
அதன் பலனாக அவர்கள் பல கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள்.
ஆனால், சமூக விதிகள் சரியாக மாற்றி அமைக்கப்படும் போது
காதல் அத்தகைய கஷ்டங்களுக்கு உள்ளாக அவசியம் நேராது.
காதலில்லாத கலியா ணங்களுக்குத்தான் அப்போது
நிர்ப்பந்தங்கள் ஏற்பத்துவார்கள்.
ஆகவே,
இலட்சிய விவாகத்துக்கு முதல் நிபந்தனை காதல். காதலில்
ஒரே ஒரு குறை உண்டு. அதில் தேக தத்துவமும்
கலந்திருக்கும் காரணத் தினால் அது நெடுங்காலம்
நீடித்து நிற்பதில்லை. நாளடைவில் அதனுடைய வலிமை குன்றி
வருகிறது. அதற்குப் பிறகும் மண வாழ்க்கை சந் தோஷமாய்
நடக்க வேண்டுமானால் இன்னும் சில நிபந்தனைகளும் நிறைவேற
வேண்டும்.
- கல்கி களஞ்சியம்
நூலிலிருந்து
