பணயம் வைக்கப்படும் பயணிகள் பாதுகாப்பு!
சாலை விபத்துகளைப் போலன்றி ரயில் விபத்துகளுக்கான வாப்புகள் குறைவு.
காரணம், நிர்ணயித்த பாதையில், நிர்ண யித்த நேரத்தில் மட்டுமே ரயில்கள்
ஓடுகின்றன. ஆனால், நம் நாட்டிலோ, ரயில் விபத்துகள் பெருகியது போக,
ரயில் நிலையத்திலேயே இப்போது விபத்துகள் நிகழ ஆரம்பித்துள்ளன! ஒரு
ரயில் மாற்று பிளாட்ஃபாரத்தில் நிற்பது தாமதமாக அறிவிக் கப்பட, பயணிகள்
முண்டி அடித்து ஓடி அதில் ஏற முயன்றதில் மிதியுண்டு பலர் பரிதாபமாக
இறந்த விபத்து சமீபத்தில்தான் நிகழ்ந்தது. அதன் பாதிப்பு
அடங்குவதற்குள்ளாகவே, மேற்கு வங்கத்தில் சைந்தியா ரயில் நிலையத்தில்
இன்னொரு கோர விபத்து! பிளாட்ஃபாரத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது,
ஸ்டேஷனுக்குள் நுழைந்த இன்னொரு ரயில் மோதியிருக்கிறது! ‘இப்படிக்கூட
நிகழுமா?’ என நம்பமுடியாத அளவுக்கு அலட்சி யப் போக்கை உணர்த்தும்
விபத்து இது! இவ்வாறு நிகழ வேண்டுமென்றால், மிக அடிப்படையான பாதுகாப்பு
சாதனங்கள் பிசகியிருக்க வேண்டும்; அல்லது மிக முக்கியமான பாதுகாப்பு
விதிகள் ஊழியர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ரயில்வே
துறை அமைச்சர் இந்த வெட்கக்கேடு குறித்து வருத்தம் தெரிவித்து ராஜினாமா
செதிருந்தால் போன 67 உயிர்களை மீட்டிருக்க முடியாது என்றபோதிலும்
தார்மிக நெறிகள் காக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ரயில்வே அமைச்சர்
மம்தா பானர்ஜி, நிகழ்ந்த விபத்து ஒரு சதி என்பதாகத் தோன்றச் செது,
சி.பி.ஐ. விசா ரணையைக் கோரியிருக்கிறார்! சதி அல்ல; மன்னிக்கமுடியாத
அலட்சியம் என்பதை ரயில்வே துறை ரீதியான நடுநிலை விசாரணையே நிரூபித்து
விடும். அவ்வாறு நிரூபண மானால் அது தமக்கு அவப் பெயரை உண்டாக்கும்
என்று திட்டமிட்டே மம்தா பானர்ஜி இவ்விஷயத்தில் செயல் படுவதாகக் கருத
இடமிருக்கிறது.
அலுவலகத்துக்கே வராமலிருப்பதில், நாடாளுமன்ற
கூட்டங்களுக்கு வராமலிருக்கும் மு.க. அழகிரிக்கு நிகரான இடத்தைப்
பெறத்தக்கவர்தான் மம்தா பானர்ஜி! அவரது கவனமும் செயல்திறனும்
மேற்குவங்க அரசியலிலேயே குவிக்கப்பட்டு, அங்கு ஆட்சியில் இருக்கும்
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்குச் சங்கடங்கள் ஏற்படுத்துவதிலேயே செல
விடப்படுகின்றன! ரயில்வே துறையின் ஏராளமான கோப்புகள் அமைச்சரால் கவனிக்
கப்படாமலிருப்பதால், சுமார் 90,000 பணியிடங்கள் அத்துறையில்
நிரப்பப்படாமலே இருப்பது தெரியவந்துள்ளது! மிகுந்த ஆள்கட்டும மனித
வளமும் தேவைப்படுகிற அத்தியாவசிய சேவையான ரயில்வே துறையில் இவ்வளவு
காலியிடங்கள் இருக்கிறபோது, பணித்தரம் குறையாமல் என்ன செயும்? இருக்கிற
ஓட்டுனர்களும் கண்காணிப்பாளர்களும் கூடுதல் பணிச்சுமையை ஏற்கிறபோது,
விபத்துக்கான வாப்புகள் பெருகுவதைத் தவிர்க்க முடியாது.
இதையெல்லாம் கூர்ந்து கவனித்துச் சரிசெயாமல், ‘பயணக் கட்டணத்தை உயர்த்
வில்லை’ என்பதில் மட்டும் மம்தா பானர்ஜி பெருமைகொள்வதில் அர்த்தமில்லை.
கடந்த சில ஆண்டுகளாக இத்துறை கண்டுவருகிற லாபம், பாதுகாப்புக்கான நவீன
சாதனங்கள் பொருத்தவும் மனித வளத்தை மேம்படுத்தவும் பயனாகி விபத்துகள்
குறைந் திருக்க வேண்டும். ஆனால் நேர்மாறாக இருக்கிறது நிலைமை.
பிரதமர் தலையிட்டு மம்தா பானர்ஜியின் ராஜினாமாவைக் கோரலாம்; கோர
வேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்களால் மௌனம் காக்கிறார்! கூடவே ரயில்வே
பயணிகளின் பாது காப்பையும் பணயம் வைக்கிறார்!
